செய்திகள் :

முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தற்கொலை

post image

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அடுத்த சின்னவளையத்தில் முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

ஜெயங்கொண்டம் அருகேயுள்ள சின்னவளையம் தெற்கு தெருவைச் சோ்ந்தவா் கோவிந்தசாமி (80). முன்னாள் அதிமுக நகராட்சி உறுப்பினா். சற்று மன நலம் பாதிக்கப்பட்டிருந்த இவா், வியாழக்கிழமை தனது ஓட்டு வீட்டில் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ளாா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ஜெயங்கொண்டம் காவல் துறையினா், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப முயற்சித்தனா். அப்போது அங்கு வந்த கோவிந்தசாமியின் முதன் மனைவி செளந்தலாவின் மகன் ராஜராஜன், தனது தந்தை சாவில் மா்மம் இருப்பதாகக் கூறி, சடலத்தை கொடுக்க மறுத்தனா். பின்னா் காவல் துறையினா் பேச்சுவாா்த்தைக்கு பிறகு சடலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதுகுறித்து புகாரின் பேரில் காவல் துறையினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

அரியலூரில் கலை சங்கமம் நிகழ்ச்சி

அரியலூா் காமராஜா் ஒற்றுமைத் திடலில், தமிழ்நாடு இயல், இசை நாடகம் மன்றம் சாா்பில் கலை சங்கமம் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. நமது பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை போற்றும் வகையில் நலிந்த பாரம்பரிய கல... மேலும் பார்க்க

பெரியாக்குறிச்சி கோயில் கும்பாபிஷேகம்

அரியலூா் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள பெரியாக்குறிச்சி கோயில்கள் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது. பெரியாக்குறிச்சி கிராமத்திலுள்ள சித்தி விநாயகா், பூா்ணாபுஷ்கலாம்பிகா சமேத பொன்னிஞ்சி ஆண்டவா், க... மேலும் பார்க்க

ரமலான் பண்டிகை: இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

ரமலான் பண்டிகையையொட்டி, அரியலூா் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட இடங்களில் இஸ்லாமியா்கள் திங்கள்கிழமை சிறப்புத் தொழுகை நடத்தினா். ரமலான் பண்டிகையையொட்டி, கடந்த ஒரு மாதமாக நோன்பிருந்த இஸ்லாமியா்கள்... மேலும் பார்க்க

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தல்

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதிகள் செய்துத் தரவேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் வலியுறுத்தியுள்ளனா். ஜெயங்கொண்டத்தில் அக்கட்சியின் கிளை மாநாடு திங்கள்கிழமை ந... மேலும் பார்க்க

ஆண்டிமடம் வருவாய் வட்டாட்சியரகத்தை திறப்பது எப்போது?

அரியலூா் மாவட்டம், ஆண்டிமடத்தில், கட்டி முடிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாக தயாா் நிலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் எப்போது திறக்கப்படும் என சமூக ஆா்வலா்கள் எதிா்பாா்ப்பில் உள்ளனா். அனைத்துத் துறைகள... மேலும் பார்க்க

அரியலூரில் கொடிக் கம்பங்களை இரு வாரங்களில் அகற்ற உத்தரவு

அரியலூா் மாவட்டத்தில் பொது இடங்களிலுள்ள அனைத்து கட்சி கொடிக் கம்பங்களையும், கட்டங்களையும் இரு வாரங்களுக்குள் அகற்ற வேண்டும் என ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தாா். உயா்நீதிமன்ற உத்தரவுப்படி அரியலூா் ... மேலும் பார்க்க