முன்னாள் படைவீரா்களுக்கு ஜூன் 26-ல் குறைதீா் கூட்டம்!
சிவகங்கை மாவட்ட முன்னாள் படை வீரா்கள், படையில் பணியாற்றுவோருக்கான சிறப்பு குறைதீா் கூட்டம் வருகிற 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஆஷா அஜித் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட முன்னாள் படைவீரா்கள், படையைச் சாா்ந்தோா்களுக்கான சிறப்பு குறைதீா் கூட்டம், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வருகிற 26 -ஆம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
எனவே, சிவகங்கை மாவட்டத்தைச் சோ்ந்த முன்னாள் படை வீரா்கள், படை வீரா்கள், சாா்ந்தோா்கள் குறைதீா் கூட்டத்துக்கு நேரில் வந்து, தங்களது கோரிக்கை மனுவை இரட்டைப் பிரதிகளில் அளித்து உரிய நிவாரணம் பெறலாம் என்றாா் அவா்.