செய்திகள் :

`முன்னிறுத்தப்பட்ட இந்தி; புறக்கணிக்கப்பட்ட கன்னட மொழி' - வைரலாகும் பெங்களூர் RSS நிகழ்ச்சி

post image

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த வெள்ளிக்கிழமை அகில பாரதிய பிரதிநிதி சபா (ABPS) கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத், ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே கலந்துகொண்டு தலைமைதாங்கினர். இந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஆர்.எஸ்.எஸ் பொதுச் செயலாளர் தத்தாத்ரேய ஹோசபாலே செய்தியாளர்களிடம் பேசினார்.

மோகன் பகவத்

அப்போது, ,``இந்தியாவின் நெறிமுறைகளுக்கு எதிரான ஒருவரை நாம் சின்னமாக்கப் போகிறோமா? படையெடுப்பு மனநிலை கொண்டவர்கள் இந்தியாவிற்கு அச்சுறுத்தல். சமூக நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஔரங்கசீப்பின் சகோதரர் தாரா ஷிகோவை விட ஔரங்கசீப்தான் ஒரு அடையாளமாக முன்னிறுத்தப்படுகிறார்.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடத்தப்பட்டால், அது ஒரு சுதந்திரப் போராட்டம். அவர்களுக்கு முன் இருந்தவர்களுக்கு எதிரான போராட்டமும் ஒரு சுதந்திர இயக்கமாகும். இது மதத்தைப் பற்றிய முடிவல்ல. ஆர்.எஸ்.எஸ்-ஸின் உறுதியான பார்வையும் இதுதான். வக்ஃப்பிற்காக அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளது. இதுவரை அரசின் செயல்பாடுகள் சரியாகத்தான் செல்கிறது. இதற்குப் பிறகு அவர்களின் நடவடிக்கை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்." என்றார்.

Dattatreya Hosabale

இந்தக் கூட்டம் நடந்துகொண்டிருக்கும்போதே சமூக வலைதளங்களில் கன்னட மொழி புறக்கணிக்கப்பட்டது தொடர்பான விவாதம் நடந்துவருகிறது. இந்த நிகழ்வில் வைக்கப்பட்ட பதாகைகள் அனைத்தும் இந்தி மொழியிலேயே இருந்தது. கன்னடப் பலகைகள் இல்லாதது சமூக வலைதளங்களில் கடுமையான எதிர்வினைகளைத் ஏற்படுத்தியிருக்கிறது. மாநில மொழிகளைப் புறக்கணித்து இந்தியை ஆர்.எஸ்.எஸ் ஊக்குவிப்பதாகக் கண்டித்துள்ளனர்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Summer Health Drinks: கோடையில் உடல் குளிர்ச்சியாக இருக்க என்னென்ன அருந்தலாம்?

இதோ அப்படி, இப்படி என்று கோடைக்காலம் வந்தே விட்டது. `ஏப்ரல் மாதத்திலேயே வெயில் இந்தக் காட்டு காட்டுகிறதே... அக்னி நட்சத்திரம் வந்தால் இன்னும் நாம் என்ன பாடுபடப் போகிறோமோ’ என்ற புலம்பல்களும் அதிகரித்து... மேலும் பார்க்க

த.வெ.க பொதுக்குழு அறுசுவை மெனு: வெஜ் மட்டன் பிரியாணி, இறால் 65... தொண்டர்களுக்கு தடபுடல் விருந்து

இன்று த.வெ.க-வின் முதல் பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்தப் பொதுக்குழு கூட்டம் நடக்கும் இடத்திற்கு அந்தக் கட்சியின் தலைவர் விஜய் வந்துவிட்டார். தற்போது இந்தப் பொதுக்குழு கூட்டத்தின் மெனு வெளியாகி ... மேலும் பார்க்க

Doctor Vikatan: காலையில் எழுந்ததும் குதிகால் வலி; முதல் அடி வைக்கும்போது கடும் வலி... தீர்வு என்ன?

Doctor Vikatan: எனக்கு கடந்த சில மாதங்களாக குதிகால் பகுதியில் கடுமையான வலி இருக்கிறது. குறிப்பாக, காலையில் தூக்கத்தில் இருந்து எழுந்திருந்து, தரையில் பாதங்களை வைத்ததும்வலி உயிரே போகிறது. பிறகு மெள்ளமெ... மேலும் பார்க்க

``எந்த பேரிடராலும் கேரளாவை தோற்கடிக்க முடியாது'' - வயநாடு டவுன்ஷிப் அடிக்கல் விழாவில் பினராயி விஜயன்

கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் முண்டக்கை, சூரல்மல பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ம் தேதி உருள்பொட்டல் எனப்படும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 200-க்கும் மேற்பட்டவர்கள் மரணமடைந்தனர். நூற்றுக்கணக்கான வ... மேலும் பார்க்க

`அண்ணாமலைக்கு முன்னரே' அமித் ஷாவை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன் - சைலண்ட் மூவ்!

இந்த வாரம் தமிழ்நாட்டிற்கும், அமித் ஷாவிற்கும் மிகுந்த தொடர்பு உடையது போலும்.தமிழ்நாட்டில் இருந்து ஒவ்வொரு அரசியல் தலைவர்களாக அமித் ஷா வீட்டிற்கு விசிட் அடித்து வருகின்றனர்.கடந்த செவ்வாய்க்கிழமை (25.0... மேலும் பார்க்க

`கறுப்போ, வெள்ளையோ யாராக இருந்தாலும்..' -நிறம் குறித்த அவதூறுக்கு கேரள தலைமைச் செயலாளர் சாரதா பதிலடி

கேரள தலைமைச் செயலாளர் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ்கேரள தலைமைச் செயலாளராக இருக்கும் சாரதா முரளிதரன் ஐ.ஏ.எஸ் அதிகாரியை சிலர் கறுப்பு என விமர்சித்ததாக முகநூலில் கருத்து பதிவிட்டிருந்தார். நிறம் குறித்த பாகுபா... மேலும் பார்க்க