செய்திகள் :

மும்பைக்கு ஆரஞ்சு எச்சரிக்கை: போக்குவரத்து முடங்கியது!

post image

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இன்று காலைமுதல் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் நீர் தேங்கி போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டவாளங்களில் நீர் தேங்கியதால் ரயில் சேவையும், மோசமான வானிலை காரணமாக 200-க்கும் மேற்பட்ட விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், அம்மாநிலத்தில் 11 மாவட்டங்களுக்கு இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, மும்பை, தாணே உள்ளிட்ட மகாராஷ்டிர மாநிலங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், காலைமுதல் பெய்த கனமழை காரணமாக ஆரஞ்சு எச்சரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது.

மும்பை, தாணே, ராய்காட் மாவட்டங்களுக்கு மிககனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை வானிலை மையம் விடுவித்ததை தொடர்ந்து, பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

இன்று காலை 9 மணிமுதல் 10 வரையிலான ஒரு மணிநேரத்தில் மட்டும் மும்பையின் நரிமன் பாயிண்ட் பகுதியில் 104 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது.

பல்வேறு சாலைகளிலும் தாழ்வான பகுதிகளில் உள்ள தண்டவாளங்களிலும் மழை நீர் தேங்கியதால் இன்று காலை அலுவலகத்துக்கு சென்றோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மேலும், மும்பை பகுதியில் அடுத்த 24 மணிநேரத்துக்கு 40 கி.மீ. வரை காற்றுடன் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளதால் மாநகராட்சி அதிகாரிகள் உஷார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிக்க : நாட்டில் கரோனா பாதிப்பு 1,000-யைத் தாண்டியது! மாநில வாரியாக விவரம்!!

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க

அதிநவீன ஆயுதங்கள், பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் செயல்திறன்: ராணுவம் தீவிர பரிசோதனை

இந்திய ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ள அடுத்த தலைமுறை பாதுகாப்பு தொழில்நுட்பங்கள், அதிநவீன ஆயுதங்கள், உள்நாட்டு தயாரிப்பு பாதுகாப்பு அமைப்பு முறைகள் உள்ளிட்டவற்றின் செயல்திறனை மதிப்பிடுவதற்காக, நாட்டின்... மேலும் பார்க்க