திருமலை திருப்பதி: 'ஆனந்தமும் ஆன்மீகமும் சேரும் புனிதத் தலம்' | Photo Album
மும்பையில் கொட்டித்தீர்த்த கனமழை: சிவப்பு எச்சரிக்கை!
மும்பையில் பல பகுதிகளில் நேற்றிரவு பெய்த கனமழையால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து, இந்திய வானிலை ஆய்வு மையம் மும்பைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மும்பை வானிலை ஆய்வு மையத்தின் கூற்றுப்படி,
மும்பையில் நள்ளிரவு தொடர்ந்து பெய்த கனமழையால் சாலைகள் வெள்ளக்காடானது. இதனிடையே, மும்பை, தாணே மற்றும் ராய்காட் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை, மணிக்கு 30 முதல் 40 கி..மீ வேகத்தில் பலத்த காற்றும் வீச வாய்ப்புள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பல பகுதிகளில் பெய்த கனமழையால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்தேரி சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியிருப்பதால் அங்குப் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. கோகலே பாலம் வழியாகப் போக்குவரத்து திருப்பிவிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், இன்று காலை முதல் புணேவில் கனமழை பெய்து வருகின்றது.
மேலும் செப். 16ல் கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரம் மற்றும் மராத்தாவாடாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் கனமழை முதல் சில இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும் என ஐஎம்டி எச்சரிக்கை விடுத்துள்ளது.
வானிலை நிலவரத்தைக் கருத்தில் கொண்டு மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, திங்கள்கிழமை காலை தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக மும்பையின் வடலா பகுதியில் மோனோ ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை, மேலும் அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டு மற்றொரு மோனோ ரயிலுக்கு மாற்றப்பட்டதாக மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.