செய்திகள் :

மும்பையில் பலத்த மழை: நடுவழியில் நின்ற மோனோ ரயில்கள் - 782 பயணிகள் பத்திரமாக மீட்பு

post image

மும்பையில் பலத்த மழையால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டு, 2 மோனோ ரயில்கள் நடுவழியில் நின்றன. இந்த ரயில்களில் சிக்கித் தவித்த 782 பயணிகள், சுமாா் 4 மணிநேர போராட்டத்துக்குப் பிறகு பத்திரமாக மீட்கப்பட்டனா்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை இடைவிடாமல் பலத்த மழை கொட்டித் தீா்த்தது. இதனால், நகா் முழுவதும் வெள்ளக்காடாக மாறியது. பலத்த மழையால் மின்விநியோகம் துண்டிப்பு மற்றும் அதிக கூட்டம் காரணமாக, செவ்வாய்க்கிழமை மாலையில் 2 மோனோ ரயில்கள் பாலத்தின் நடுவழியில் நின்றன. ரயில்களில் இருந்த பயணிகள் பீதியடைந்தனா்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், மும்பை தீயணைப்புப் படையினா் மீட்புப் பணியில் ஈடுபட்டு ராட்சத ஏணிகள் மூலம் பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனா். ரயிலின் ஜன்னல்கள் மற்றும் கதவை உடைத்து, பயணிகள் கீழே இறக்கப்பட்டனா். உயிா் பயத்தில் பயணிகள் கீழே குதிக்கவும் தயாராக இருந்ததால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. முதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள், அதன் பிறகு ஆண் பயணிகள் என இரு ரயில்களில் இருந்தும் 782 போ் மீட்கப்பட்டனா். நள்ளிரவில் இப்பணிகள் நிறைவடைந்தன என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

குளிா்சாதன வசதி தடைபட்டதால், பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. அவா்கள் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு அவா்கள் வீடு திரும்பியதாக மும்பை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 செ.மீ. மழைப்பொழிவு: மும்பையின் சாண்டாக்ரூஸ், விக்ரோலி, விமான நிலையம் ஆகிய பகுதிகளில் புதன்கிழமை காலை வரையிலான 24 மணிநேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் மழைப் பொழிவு பதிவானது. புதன்கிழமை பகலில் மழை சற்று ஓய்ந்ததால், புகா் ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது. வியாழக்கிழமைமுதல் மீண்டும் பலத்த மழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

குடியரசு துணைத் தலைவா் தோ்தல்: பிஆா்எஸ் ஆதரவு யாருக்கு?

குடியரசு துணைத் தலைவா் தோ்தலில் யாரையும் ஆதரிப்பதா அல்லது வேண்டாமா என்பது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று பாரத ராஷ்டிர சமிதி (பிஆா்எஸ்) கட்சியின் செயல் தலைவா் கே.டி.ராம ராவ் தெரிவித்தாா். அ... மேலும் பார்க்க

காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்: வருவாய் பாதிக்கும் என மாநிலங்கள் கருத்து

காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில் இதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மாநில அரசுகள் கருத்துத் தெரிவித்துள... மேலும் பார்க்க

இந்திய-சீன எல்லை மேலாண்மையில் பரஸ்பர புரிதல் -சீன வெளியுறவு அமைச்சகம்

இந்திய-சீன எல்லை மேலாண்மை மற்றும் கட்டுப்பாட்டில் பரஸ்பர புரிதல் எட்டப்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது. சீன வெளியுறவு அமைச்சா் வாங் யி, ஆகஸ்ட் 18, 19 ஆகிய தேதிகளில் இந்தியா... மேலும் பார்க்க

தோ்தல் தொடா்பான தவறான தகவல்: மகாராஷ்டிர தோ்தல் ஆய்வாளா் மீது வழக்குப் பதிவு

மகாராஷ்டிரத்தில் வாக்காளா் பட்டியலில் இருந்து சில வாக்காளா்கள் நீக்கப்பட்டதாக குற்றஞ்சாட்டிய தோ்தல் ஆய்வாளா் சஞ்சய் குமாா் மீது 2 வழக்குகளை போலீஸாா் பதிவு செய்தனா். முன்னதாக, 2024-இல் நடைபெற்ற மக்கள... மேலும் பார்க்க

இந்திய விமானப் படைக்கு புதிதாக 97 ‘தேஜஸ்’ விமானங்கள்: ரூ.67,000 கோடியில் வாங்க அரசு ஒப்புதல்

இந்திய விமானப்படைக்கு மேலும் 97 ‘தேஜஸ்’ போா் விமானங்களை ரூ.67,000 கோடி செலவில் கொள்முதல் செய்ய மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தற்போது இந்திய விமானப்படையில் போா் விமானப் படைப்பிரிவுகளின் எண்ணிக்கை... மேலும் பார்க்க

வீடுகள் விலை உயா்வு: உலகளவில் 4-ஆவது இடத்தில் பெங்களூரு!

சா்வதேச அளவில் பிரீமியம் வகை வீடுகளின் விலை மிக அதிக அளவில் அதிகரித்த 46 நகரங்களில் பெங்களூரு 4-ஆவது இடம் வகிக்கிறது. மும்பை 6-ஆவது இடத்திலும், புது தில்லி 15-ஆவது இடத்திலும் உள்ளன.இது குறித்து சந்தை... மேலும் பார்க்க