செய்திகள் :

மும்பையில் விமான சேவை பாதிப்பு: இண்டிகோ முக்கிய அறிவிப்பு

post image

மும்பையில் கனமழை பெய்து வருவதால் விமானப் போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

மும்பையில் இன்று(திங்கள்கிழமை) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி பல முக்கிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

வானிலை மோசமாக இருப்பதால் விமானப் போக்குவரத்து சேவையும் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வானிலை நிலவரத்துக்கு ஏற்ப அவ்வப்போது விமானங்கள் இயக்கப்படுவதாகவும் சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இண்டிகோ நிறுவனம் தனது பயணிகளுக்கு முக்கிய அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

இண்டிகோ தனது எக்ஸ் பக்கத்தில்,

"தற்போது மும்பையில் பலத்த மழை பெய்து வருவதால் விமானங்கள் புறப்படுவதில் தற்காலிக இடையூறு ஏற்பட்டுள்ளது.

மும்பையில் இருந்து நீங்கள் இன்று பயணம் செய்கிறீர்கள் என்றால், விமானங்கள் தாமதமாகப் புறப்படலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். கூடுதல் நேரமும் பயணிக்க நேரிடலாம். ஏனெனில் வானிலை காரணமாக விமானம் மெதுவாகவே செல்லும்.

நிலைமையை நாங்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். விரைவில் விமானங்கள் புறப்பட ஏற்பாடு செய்வோம்.

பயணிகள், புறப்படுவதற்கு முன் எங்களுடைய மொபைல் செயலி அல்லது http://bit.ly/31paVKQ என்ற இணையதளத்தில் நீங்கள் பயணிக்கும் விமானத்தின் நிலவரம் பற்றி தெரிந்துகொள்ளவும்" என்று குறிப்பிட்டுள்ளது.

இதையும் படிக்க | 2027ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு! - அரசிதழில் அறிவிப்பு வெளியானது

மீண்டும்... ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: தில்லியில் பத்திரமாக தரையிறக்கம்!

புது தில்லி: தில்லியிலிருந்து ராஞ்சிக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. இதனால், அந்த விமானம் மீண்டும் தில்லி விமான நிலையத்துக்கே திரும்பியது. தில்லியிலிருந்து இன்று(... மேலும் பார்க்க

பெட்ரோல் நிலைய ஊழியரை துப்பாக்கி முனையில் மிரட்டிய பெண்!

உத்தரப் பிரதேசத்தில் பெட்ரோல் நிலைய ஊழியருக்கு பெண் ஒருவர் துப்பாக்கி முனையில் மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரில் எரிவாயு (கேஸ்) நிரப்பும்போது பாதுகாப்பு கருதி காரில் இருப்... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்!

புணே: புணே மாவட்டத்தில் இந்திரயாணி ஆற்றுப்பாலம் இடிந்த விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாய... மேலும் பார்க்க

புணே: ஆற்றுப்பாலம் இடிந்ததற்கு மக்களின் அலட்சியமே காரணம்! -பாஜக அமைச்சர்

புணே: புணே மாவட்டத்தில் இந்திராயணி ஆற்றின் மீது கட்டப்பட்ட பழைய இரும்புப்பாலம் ஞாயிற்றுக்கிழமை(ஜூன் 15) இடிந்து விழுந்ததில் அந்த பாலத்தில் சென்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றில் விழுந்தனர். இந்த கோர வி... மேலும் பார்க்க

சாலையில் பெண்ணை அறைந்த பைக் டாக்ஸி ஓட்டுநர் மீது வழக்கு!

பெங்களூருவில் ரேபிடோ பைக் டாக்ஸியில் சென்ற பெண்ணை சாலையில் வைத்து அறைந்த ஓட்டுநர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வண்டியை வேகமாக ஓட்டியதால் பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு இறங்கிய ... மேலும் பார்க்க

மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி 2.8% அதிகரிப்பு! இறக்குமதி 1% குறைவு!

கடந்த மே மாதத்தில் நாட்டின் ஏற்றுமதி மதிப்பு 2.8% அதிகரித்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த ஆண்டு மே மாதத்திற்கான நாட்டின் மொத்த வணிகப் பொருட்கள் மற்றும் சேவை ஏற்றுமதி 71.12 பில்ல... மேலும் பார்க்க