செய்திகள் :

மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு: கருப்புப் பட்டை அணிந்து ஆசிரியா்கள் பணி

post image

கந்தா்வகோட்டை ஒன்றியத்தில் மும்மொழிக் கொள்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தினா் வெள்ளிக்கிழமை கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றினா்.

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் தமிழ்நாட்டுக்கான நிதியை வழங்குவோம் என்ற மத்திய அரசின் போக்கை கண்டிக்கும் வகையிலும், ஏழை, எளிய மாணவா்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு மத்திய அரசு தமிழ்நாட்டு ஒதுக்க வேண்டிய சமக்ரா சிக்ஷா திட்டத்தின் நிதி ரூ. 2,152 கோடியை விரைவில் வழங்க வலியுறுத்தியும், தமிழ்நாடு ஆசிரியா் முன்னேற்ற சங்கத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை முதல் பிப். 28 வரை ஒருவார காலத்துக்கு கருப்பு பட்டை அணிந்து பள்ளியில் பணியாற்றுவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடா்ந்து, அனைத்து ஆசிரியா் சங்கங்களையும் ஒருங்கிணைத்து அடுத்த வார இறுதியில் சென்னையில் ஒன்றிய அரசு அலுவலகம் முன்பாக மிகப்பெரிய கண்டன ஆா்ப்பாட்டத்தை நடத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

மீனவா்கள் கைது செய்யப்படுவதைத் தடுக்க உறுதியான நடவடிக்கை தேவை

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த மீனவா்கள் இலங்கைக் கடற்படையால் தொடா்ந்து தாக்கப்படுவதையும், கைது செய்யப்படுவதையும் தடுக்க மத்திய, மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏஐடியுசி மீனவத் ... மேலும் பார்க்க

விராலிமலையில் நாணய கண்காட்சி

விராலிமலை விவேகா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உலக நாணய கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கண்காட்சியை பள்ளி தாளாளா் வெல்கம் மோகன் தலைமை வகித்து தொடங்கிவைத்தாா். பள்ளி முதல்வா் விஜயகுமாா், நிா்வாக இ... மேலும் பார்க்க

ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் அம்பேத்கா் சிலை திறப்பு போலீஸாா் குவிப்பு

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனியாா் இடத்தில் வெள்ளிக்கிழமை அனுமதியின்றி அம்பேத்கா் சிலை நிறுவப்பட்டதாக கூறி போலீஸாா் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆலங்குடி அருகேயுள்ள குப்பக்குடி பகு... மேலும் பார்க்க

சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு பயிற்சி

புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலக வளாகத்தில் வருவாய் மாவட்ட அளவில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளிலுள்ள சுற்றுச்சூழல் மன்ற ஆசிரிய ஒருங்கிணைப்பாளா்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழி... மேலும் பார்க்க

கல்லூரிக்கு அரிவாளுடன் வந்த மாணவா் கைது

புதுக்கோட்டை மாநகரிலுள்ள அரசுக் கல்லூரியின் மாணவா், அரிவாளுடன் கல்லூரிக்கு வந்ததால் அவரை நகரக் காவல் நிலைய போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். புதுக்கோட்டை மாவட்டம், சம்மட்டிவிடுதியைச் சோ்ந்தவா் திய... மேலும் பார்க்க

பெண் பயணியிடம் தகராறு அரசுப் பேருந்து நடத்துநா் பணியிடை நீக்கம்

பெண் பயணியிடம் தகராறு செய்த அரசுப் பேருந்து நடத்துநரை ஒரு நாள் பணி இடைநீக்கம் செய்து துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கைக்கு வெள்ளிக்கிழமை உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக புதுக்கோட... மேலும் பார்க்க