செய்திகள் :

"முருகன் அனைவருக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்" - குமரி கோயிலில் வேல் பூஜை செய்த சுரேஷ் கோபி!

post image

கன்னியாகுமரி மாவட்டதில் உள்ள வேளிமலை குமாரகோயில் முருகன் திருத்தலம் தமிழகம் மற்றும் கேரள பக்தர்களிடையே பிரசித்தி பெற்றது. நவராத்திரி விழாவுக்காக இங்குள்ள முருகப்பெருமான் திருவனந்தபுரத்துக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி தமிழகம் மற்றும் கேரளா ஆகிய இருமாநில அரசு விழாவாக கொண்டாடப்படும். பிரசித்தி பெற்ற வேளிமலை குமாரசுவாமி கோயிலுக்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு  துறை இணை அமைச்சரான நடிகர் சுரேஷ் கோபி இன்று சுவாமி தரிசனம் செய்தார். திருச்சூர் தொகுதியில் எம்.பி-யாக வெற்றிபெற்ற நிலையில் பல்வெறு வழிபாடுத்தலங்களில் காணிக்கை செலுத்தியும், வழிபாடுகள் நடத்தியும் வரும் சுரேஷ் கோபி, தனது மனைவி, இரு மகள்கள், மகன்கள், அம்மா ஆகியோருடன் சுவாமி தரிசனம் செய்தார். அவரை கோயில் நிர்வாகம் சார்பாக இந்து அறநிலைய துறை அதிகாரிகள் வரவேற்றனர்.

மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபிக்கு பிரசாதம் வழங்கப்பட்டது

சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள பித்தளை வேலுடன் கோயிலுக்கு வந்திருந்தார் சுரேஷ் கோபி. முதலில் கணபதி சன்னதியில் வழிபட்டார். பின்னர் வள்ளி சமேதரராக காட்சியளிக்கும் முருகபெருமானை தரிசனம் செய்தார். சுரேஷ் கோபியின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறு வேல்களை முருகப்பெருமானுக்கு காணிக்கையாக செலுத்தினர். சுரேஷ் கோபி கொண்டு வந்த வேலை முருகபெருமான் காலடியில் வைத்து பூஜைசெய்யும்படி அர்ச்சகர்களிடம் கேட்டுக்கொண்டார். பூஜைக்குப் பின்னர் அந்த வேலை திரும்ப பெற்று கொண்டார் சுரேஷ் கோபி. சுரேஷ் கோபிக்கும், அவரது குடும்ப உறுப்பினர்களுக்கும் அர்ச்சகர்கள் வாழை இலையில் பிரசாதம் வழங்கினர்.

முருகன் சன்னதியில் வழிபட்ட சுரேஷ் கோபி

கோயிலில் வழிபட்டுவிட்டு வெளியே வந்த சுரேஷ் கோபியுடன் அங்கிதுந்த பக்தர்களும் கோயில் ஊழியர்களும் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். பா.ஜ.க மாவட்ட பொதுச்செயலாளர் குமரி பா.ரமேஷ் மத்திய அமைச்சர் சுரேஷ் கோபிக்கு முருகர் படம் நினைவு பரிசாக வழங்கினார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சுரேஷ் கோபி, "குமாரகோயிலுக்கு இரண்டாவது முறையாக குடும்பத்தோடு வந்துள்ளேன். சுவாமி தரிசனம் மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. முருகனை வேண்டி பிராத்தனை செய்துவிட்டு மகிழ்ச்சியாக வீட்டிற்கு செல்கிறோம். செய்யும்  வேலைகள் நன்றாக அமைய வேண்டும், மக்களுக்கு தகுந்த வேலைகள் அமைய வேண்டும், முருகன் அனைத்து மனிதர்களுக்கும் நல்ல சக்தியை வழங்க வேண்டும்" என்றார்.

பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மன் கோயில் குண்டம் திருவிழா; கடலென கூடிய பக்தர்கள் - Photo Album

பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண்ணாரி அம்மன் குண்டம்பண... மேலும் பார்க்க

திருச்செந்தூர்: கடலில் வீசப்படும் துணிகள்; நீராடும் பக்தர்களுக்கு ஏற்படும் இடையூறு!

பாவத்தை போக்கும் இடம் பாபநாசம் என்கிறாரகள். அதன் காரணமாக பரிகாரம் செய்ய வருபவர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. அதற்காக வருபவர்கள் அவரவர் தன்மைக்கேற்ப யாகமோ, தர்ப்பணமோ செய்து விட்டு நதியில் தலைமுழுக... மேலும் பார்க்க

ராமநவமி தோன்றிய புராண வரலாறு: ஸ்ரீராமநவமி விரதம் - நினைவில் கொள்ள வேண்டியவை

'கலியுகத்தில் கடுமையான விரதங்களோ பூஜைகளோ செய்துதான் புண்ணியபலன்களை அடையவேண்டும் என்பது அவசியமில்லை. அன்புடன் பகவானின் திருநாமத்தினைச் சிந்தித்தாலே போதும்' என்பது எல்லாம் வல்ல பரம்பொருளின் திருவாக்கு.அ... மேலும் பார்க்க

நீலகிரி: `12 ஆண்டுகளுக்கு ஒருமுறை' - விரதமிருந்து கோவில் கூரை மாற்றும் தாேடர் பழங்குடியினர்

பாரம்பரியம் மாறாமல் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கோவில் கூரை மாற்றும் தாேடர் பழங்குடியினர். மேலும் பார்க்க

விழுப்புரம்: 1300 ஆண்டுகள் பழைமைவாய்ந்த பல்லவர் காலத்து சிற்பங்கள் கண்டெடுப்பு; ஆய்வாளர் சொல்வதென்ன?

விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் அருகே முன்னூர் கிராமம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்று ஆய்வாளர் மற்றும் எழுத்தாளரான கோ.செங்குட்டுவன் மார்ச் 27ஆம் தேதி வியாழக்கிழமை அன்று வரலாற்று சிறப்புமிக்க ஆடவல்லீஸ்... மேலும் பார்க்க

ஈரோடு: களைகட்டிய பெரிய மாரியம்மன் கோயில் திருவிழா - சிறப்பு புகைப்படத் தொகுப்பு!

ஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழாஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழாஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழாஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழாஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழாஈரோடு பெரிய மாரியம்மன் திருவிழாஈரோடு பெரிய மா... மேலும் பார்க்க