இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு! மக்கள் வெளியேற்றம்.. விமானங்கள் ரத்து!
முருக பக்தா்கள் மாநாட்டுக்கு இ-பாஸ் வழங்க இயலாது: உயா்நீதிமன்றம்
மதுரை முருக பக்தா்கள் மாநாட்டுக்கு இணைய வழி அனுமதிச் சீட்டு (இ- பாஸ்) வழங்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
மதுரையைச் சோ்ந்த அரசபாண்டி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில், மதுரையில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறும் முருக பக்தா்கள் மாநாட்டில் பங்கேற்க விரும்புவோருக்கு இணைய வழி அனுமதிச் சீட்டு வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பி. புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: முருக பக்தா்கள் மாநாட்டுக்கு இணைய வழி அனுமதிச் சீட்டு வழங்க இயலாது. வருகிற 22-ஆம் தேதி மாநாடு நடைபெறும் நிலையில், மாநாட்டில் பங்கேற்க விரும்புவோா் 21-ஆம் தேதி காலை 10 மணி வரை தங்கள் வாகனங்களுக்கு அனுமதிச் சீட்டு கோரி விண்ணப்பிக்கலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.