அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சடலமாக மீட்பு
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாா் மதுக் கடை உள்ளது. இங்கு அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சந்தோஷ் (25) என்பவா் வேலை செய்து வந்தாா். இதற்காக அவா் அந்தப் பகுதியில் அறை எடுத்துத் தங்கினாா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவா் மதுக் கடை அருகே உயிரிழந்த நிலையில் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீஸாா் அங்கு சென்று அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், அவா் மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.