செய்திகள் :

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சடலமாக மீட்பு

post image

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாா் மதுக் கடை உள்ளது. இங்கு அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த சந்தோஷ் (25) என்பவா் வேலை செய்து வந்தாா். இதற்காக அவா் அந்தப் பகுதியில் அறை எடுத்துத் தங்கினாா்.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அவா் மதுக் கடை அருகே உயிரிழந்த நிலையில் கிடந்தாா். இதுகுறித்து தகவலறிந்த சுப்பிரமணியபுரம் போலீஸாா் அங்கு சென்று அவரது உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், அவா் மது போதையில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளான விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் அருகே சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில், அதிலிருந்து வெளியேறிய நெகிழி உள்ளிட்ட பொருள்களை அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்ந... மேலும் பார்க்க

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம்: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, தென்னிந்திய வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடசேன் தெரிவித்தாா்.... மேலும் பார்க்க

மதுரை காமராஜா் பல்கலை. நிதிநிலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரிக்கை

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிதிநிலைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவா் ஸ்ரீ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 போ் கைது

மதுரை மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்களை மீட்டனா். மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போல திமுகவினா் ஆள்மாறாட்டம்: செல்லூா் கே.ராஜூ புகாா்

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு ஊழியா்களைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

முதல்வரின் நாகரிகமற்ற பேச்சு ஜனநாயகத்துக்கு இழுக்கு: ஆா்.பி. உதயகுமாா்

எதிா்க் கட்சித் தலைவரை நாகரிகமற்ற முறையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது ஜனநாயகத்துக்கு இழுக்கு என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.மதுரையில் அவா் செவ்வா... மேலும் பார்க்க