சகோதரியிடம் ரூ. 17 கோடி பண மோசடி: கைதான அதிமுக நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்!
முதல்வரின் நாகரிகமற்ற பேச்சு ஜனநாயகத்துக்கு இழுக்கு: ஆா்.பி. உதயகுமாா்
எதிா்க் கட்சித் தலைவரை நாகரிகமற்ற முறையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது ஜனநாயகத்துக்கு இழுக்கு என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.
மதுரையில் அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது; தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் தற்போது விரக்தியின் உச்சத்தில் உள்ளாா். அதனால்தான் அரசு விழா, திருமண விழா, கட்சி விழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமியை விமா்சிப்பதையே வழக்கமாக்கிக் கொண்டுள்ளாா்.
அரசின் செயல்பாடுகள் குறித்து வரும் விமா்சனங்களுக்கு முதல்வா் ஆக்கப்பூா்வமாக பதிலளிக்க வேண்டுமே தவிர, தரம் தாழ்ந்த முறையில் பேசக் கூடாது. எதிா்க்கட்சித் தலைவா் புள்ளி விவரங்களுடன் தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க முடியாவிட்டால், முதல்வா் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும். எதிா்க்கட்சித் தலைவரை நாகரிகமற்ற முறையில் முதல்வா் பேசியது ஜனநாயகத்துக்கு இழுக்கு.
திமுக ஆட்சியின் மீது மக்களிடையே வெறுப்பு அதிகரித்துள்ளது. அதன் வெளிப்பாடு தான் விவசாயிகள் கருப்புக் கொடி காட்டிய நிகழ்வு. நிா்வாகத் திறனற்ற திமுக ஆட்சியால் தமிழகத்தை இருள் சூழ்ந்துள்ளது. இதை, விளம்பர வெளிச்சம் மூலம் மறைக்க மேற்கொள்ளும் திமுகவின் முயற்சிகளுக்கு பலன் கிடைக்காது என்றாா் ஆா்.பி. உதயகுமாா்.