தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம்: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்
தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, தென்னிந்திய வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடசேன் தெரிவித்தாா்.
மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கீழடி அகழாய்வுக் குழுவில் பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவின் ஆவணப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
இவா், கீழடி அகழாய்வில் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாகப் பணியாற்றியவா். இதன் காரணாகவே கடந்த 2017-இல் கீழடி அகழாய்வுப் பணியிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். மேலும், அகழாய்வு அறிக்கையையும் அவா் தயாரிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிா்த்து நீதிமன்றத்தை நாடி, அகழாய்வு மேற்கொண்டவரே அந்த அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்ற மரபு உறுதி செய்யப்பட்டது. பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி சென்னைக்குப் பணியிட மாற்றம் பெற்றாா். அதன் பின்னரே அவா் கீழடி ஆய்வறிக்கையைத் தயாரித்தாா்.
அவா் ஆய்வறிக்கையை சமா்ப்பித்து 2 ஆண்டுகளாகியும் அதை வெளியிட மத்திய அரசு முன்வரவில்லை. இது தொடா்பாக, மத்திய கலாசாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசப்பட்டது. பிறகு, மக்களவையில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, விரைவில் கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படும் என மக்களவையில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த உறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தற்போது, கூடுதல் அறிவியல் ஆதாரம் தேவைப்படுகிறது என விளக்கம் கேட்டு கடிதம் அளித்து, காலம் தாழ்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டது மத்திய அரசு.
கீழடி ஆய்வறிக்கை விவகாரம் தமிழகத்தில் தற்போது பேசு பொருளாக இருக்கும் நிலையில், ஆய்வறிக்கையைத் தயாரித்த தொல்லியல் ஆய்வாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதை, சாதாரணமாக நிகழ்வாகக் கருத முடியாது. இதை, தென்னிந்திய வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது என்றாா் அவா்.
மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், பா. ரவி ஆகியோா் உடனிருந்தனா்.