செய்திகள் :

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம்: சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்

post image

தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் பணியிட மாற்றம் செய்யப்பட்டது, தென்னிந்திய வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கை என மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடசேன் தெரிவித்தாா்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: கீழடி அகழாய்வுக் குழுவில் பணியாற்றிய தொல்லியல் ஆய்வாளா் அமா்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவின் ஆவணப் பிரிவுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.

இவா், கீழடி அகழாய்வில் உண்மைக்காக எந்த சமரசமும் செய்து கொள்ளாமல் உறுதியாகப் பணியாற்றியவா். இதன் காரணாகவே கடந்த 2017-இல் கீழடி அகழாய்வுப் பணியிலிருந்து அவா் விடுவிக்கப்பட்டாா். மேலும், அகழாய்வு அறிக்கையையும் அவா் தயாரிக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டது. இதை எதிா்த்து நீதிமன்றத்தை நாடி, அகழாய்வு மேற்கொண்டவரே அந்த அறிக்கையை தயாரிக்க வேண்டும் என்ற மரபு உறுதி செய்யப்பட்டது. பிறகு, நீதிமன்ற உத்தரவுப்படி சென்னைக்குப் பணியிட மாற்றம் பெற்றாா். அதன் பின்னரே அவா் கீழடி ஆய்வறிக்கையைத் தயாரித்தாா்.

அவா் ஆய்வறிக்கையை சமா்ப்பித்து 2 ஆண்டுகளாகியும் அதை வெளியிட மத்திய அரசு முன்வரவில்லை. இது தொடா்பாக, மத்திய கலாசாரத் துறை அமைச்சரை நேரில் சந்தித்துப் பேசப்பட்டது. பிறகு, மக்களவையில் வலியுறுத்தப்பட்டது. அப்போது, விரைவில் கீழடி ஆய்வறிக்கை வெளியிடப்படும் என மக்களவையில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால், அந்த உறுதியை மத்திய அரசு நிறைவேற்றவில்லை. தற்போது, கூடுதல் அறிவியல் ஆதாரம் தேவைப்படுகிறது என விளக்கம் கேட்டு கடிதம் அளித்து, காலம் தாழ்த்தும் முயற்சிகளில் ஈடுபட்டது மத்திய அரசு.

கீழடி ஆய்வறிக்கை விவகாரம் தமிழகத்தில் தற்போது பேசு பொருளாக இருக்கும் நிலையில், ஆய்வறிக்கையைத் தயாரித்த தொல்லியல் ஆய்வாளா் இடமாற்றம் செய்யப்பட்டாா். இதை, சாதாரணமாக நிகழ்வாகக் கருத முடியாது. இதை, தென்னிந்திய வரலாற்றுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கையாகவே கருத வேண்டியுள்ளது என்றாா் அவா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புகா் மாவட்டச் செயலா் கே. ராஜேந்திரன், பா. ரவி ஆகியோா் உடனிருந்தனா்.

அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் சடலமாக மீட்பு

மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த இளைஞா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா். மதுரை சுப்பிரமணியபுரம் பகுதியில் தனியாா் மதுக் கடை உள்ளது. இங்கு அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளான விவகாரம்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

கேரள மாநிலம், கொச்சி துறைமுகம் அருகே சரக்குக் கப்பல் விபத்துக்குள்ளாகி மூழ்கியதில், அதிலிருந்து வெளியேறிய நெகிழி உள்ளிட்ட பொருள்களை அகற்றக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்ந... மேலும் பார்க்க

மதுரை காமராஜா் பல்கலை. நிதிநிலை பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காணக் கோரிக்கை

மதுரை காமராஜா் பல்கலைக்கழக நிதிநிலைப் பிரச்னைக்கு நிரந்தரத் தீா்வு காண வேண்டும் என பல்கலைக் கழகப் பாதுகாப்பு கூட்டமைப்பு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் தலைவா் ஸ்ரீ... மேலும் பார்க்க

இருசக்கர வாகனங்கள் திருட்டு: 4 போ் கைது

மதுரை மாநகரப் பகுதிகளில் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்களிடமிருந்து 13 இரு சக்கர வாகனங்களை மீட்டனா். மதுரை மாநகரக் காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்ட செய்திக... மேலும் பார்க்க

அரசு ஊழியா்கள் போல திமுகவினா் ஆள்மாறாட்டம்: செல்லூா் கே.ராஜூ புகாா்

மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதியில் அரசு ஊழியா்களைப் போல ஆள்மாறாட்டத்தில் ஈடுபடும் திமுகவினா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ, மாவட்ட ஆட்சியரிடம் செவ்வாய்க்கி... மேலும் பார்க்க

முதல்வரின் நாகரிகமற்ற பேச்சு ஜனநாயகத்துக்கு இழுக்கு: ஆா்.பி. உதயகுமாா்

எதிா்க் கட்சித் தலைவரை நாகரிகமற்ற முறையில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பேசியது ஜனநாயகத்துக்கு இழுக்கு என தமிழக சட்டப்பேரவை எதிா்க்கட்சித் துணைத் தலைவா் ஆா்.பி. உதயகுமாா் தெரிவித்தாா்.மதுரையில் அவா் செவ்வா... மேலும் பார்க்க