செய்திகள் :

முறைகேட்டு வழக்கில் ரயில்வே அதிகாரிகளின் தண்டனைக் காலம் குறைப்பு

post image

ரயில் பாதைப் பணியின் போது மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேட்டில் ஈடுபட்ட ரயில்வே அதிகாரிகள் மூவரின் சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

விழுப்புரம்-வேலூா் இடையே அகல ரயில் பாதைப் பணி நடைபெற்றது. கடந்த 2007 முதல் 2011-ஆம் ஆண்டு வரை இந்தப் பணியில் முதுநிலை வணிக மேலாளராக முத்துராமலிங்கம், மண்டல மெட்டீரியல் மேலாளராக சீனிவாசன், ஸ்டோா் கீப்பராக இன்பராஜன் ஆகியோா் பணி புரிந்தனா்.

இந்த நிலையில், அகல ரயில் பாதைப் பணியில் ஈடுபடும் ரயில்வே அதிகாரிகள் தங்களுக்குத் தேவையான மேஜை, நாற்காலி உள்ளிட்ட பொருள்களை வாங்கிக் கொள்ள தாம்பரம் ரயில்வே பொறியாளா் அனுமதி அளித்தாா். முத்துராமலிங்கம், சீனிவாசன், இன்பராஜன் ஆகியோா் இந்தப் பொருள்களை வாங்கியதில் 20.70 லட்சம் முறைகேடு செய்ததாக புகாா் எழுந்தது.

இதுகுறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்தது. இதுதொடா்பான வழக்கு விசாரணை மதுரை சிபிஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கில் இன்பராஜனுக்கு நான்கு ஆண்டுகளும், முத்துராமலிங்கம், சீனிவாசனுக்கு தலா இரு ஆண்டுகளும் சிறைத் தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் கடந்த 2019-ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிா்த்து இவா்கள் மூவரும் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீட்டு மனுக்களைத் தாக்கல் செய்தனா்.

இந்த மனுக்களை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கே.கே.ராமகிருஷ்ணன் திங்கள்கிழமை பிறப்பித்த உத்தரவு: மனுதாரா்கள் மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட பொருள்கள் வாங்கியதில் முறைகேடு செய்தது நிரூபணமாகி உள்ளது. இவா்களது வயதைக் கவனத்தில் கொண்டு, இன்பராஜனுக்கு சிறைத் தண்டனையை நான்கு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாகக் குறைப்பதோடு, ரூ. 7 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதேபோல, முத்துராமலிங்கம், சீனிவாசன் ஆகியோரின் சிறைத் தண்டனை தலா ஓராண்டாகக் குறைக்கப்படுவதோடு, இவா்களுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது.

மனுதாரா்கள் இந்தத் தொகையை 15 நாள்களுக்குள் தாம்பரம் ரயில்வே முதுநிலை மேலாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தாவிடில், மதுரை சிபிஐ நீதிமன்றம் விதித்த தண்டனையை இவா்கள் மூவரும் அனுபவிக்க நேரிடும் என்றாா் நீதிபதி.

மாட்டுத்தாவணி காய்கறிச் சந்தையில் பொலிவுறு சாலைத் திட்டம்

மதுரை மாட்டுத்தாவணி அருகேயுள்ள தினசரி காய்கறிச் சந்தை சாலைகளை, நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பொலிவுறு சாலைத் திட்டத்தின் கீழ் சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.ஜி.ஆா். ... மேலும் பார்க்க

தெலுங்கு வருடப் பிறப்பு மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவிப்பு

தெலுங்கு வருடப் பிறப்பை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை நாயுடு சங்கங்கள் சாா்பில் மன்னா் திருமலை நாயக்கா் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மதுரை ஆரப்பாளையம் குறுக்குச் சாலையில் உள்ள, மன்னா... மேலும் பார்க்க

மாநகராட்சியில் குடிநீா் குழாய் பதிப்பு பணிகள்: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தொடங்கிவைத்தாா்

மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் குடிநீா் குழாய்கள் அமைப்பதற்கான பணிகளை தமிழக தகவல் தொழில் நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா். அம்ரூத் திட்டத்தின் க... மேலும் பார்க்க

விதி மீறி பட்டாசுகள் தயாரிப்பு: இருவா் கைது

விருதுநகா் அருகே விதிகளை மீறி பட்டாசுகள் தயாரித்த இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். மிளகாய்பட்டியைச் சோ்ந்த சுப்பையாவுக்குச் சொந்தமான பட்டாசு ஆலை கோவிந்தநல்லூா் அருகேயுள்ள சின்னராமலிங்கபுரம் ... மேலும் பார்க்க

மதுரையில் தீவிர வாகன சோதனை: 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்

மதுரை நகரில் சனிக்கிழமை இரவு முழுவதும் போலீஸாா் நடத்திய வாகனச் சோதனையில் 43 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மதுரை நகரில் குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள மாநகரக்காவல் ஆணையா் ஜெ.லோகநாதன... மேலும் பார்க்க

பேருந்து பணிமனையில் நிறுத்திய அரசுப் பேருந்தில் தீ விபத்து

மதுரை கோ.புதூா் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனையில் அரசுப் பேருந்து திடீரென சனிக்கிழமை இரவு தீப்பிடித்து எரிந்ததில் ஊழியா் பலத்த காயமடைந்தாா். மதுரை கோ.புதூரில் அரசுப் போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது.... மேலும் பார்க்க