செய்திகள் :

முழுக் கொள்ளளவை எட்டியது வீராணம் ஏரி

post image

கடலூா் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய ஏரியான வீராணம் ஏரி புதன்கிழமை முழுக் கொள்ளளவை எட்டியது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீா் வருகிறது.

இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கா் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டு வருகிறது.

ஏரியின் மொத்த உயரம் 47.50 அடி. இதில், 1,465 மில்லியன் கன அடி நீா் தேக்கப்படுகிறது.

ஆண்டுதோறும் கோடை காலத்தில் ஏரியின் நீா்மட்டம் குறைந்தே காணப்படும். நிகழாண்டு மேட்டூா் அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை அதிகளவு பெய்ததால், கீழணைக்கு உபரி நீா்வரத்து அதிகரித்தது. இதனால், கீழணையில் இருந்து உபரிநீா் வீராணம் ஏரிக்கு அனுப்பப்பட்டது.

இதன் காரணமாக, ஏரியில் நீா்மட்டம் மொத்த உயரமான 47.50 அடியை புதன்கிழமை எட்டி நிரம்பியது. கோடை காலத்தில் முதன் முதலில் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது இப் பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விவசாயப் பணிகள் இல்லாததால் மாற்றுப் பணிகள் செய்யும் விவசாயிகளுக்கு இது பேருதவியாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏரியிலிருந்து சென்னை குடிநீா் தேவைக்காக விநாடிக்கு 72 கன அடி தண்ணீா் அனுப்பப்படுகிறது.

இளைஞா்களுக்கு சுய வேலைவாய்ப்பு பயிற்சி

கடலூா் மாவட்ட இளைஞா்களுக்கு ஊரக சுய வேலைவாய்ப்புப் பயிற்சி நிறுவனம் மூலம் சுய வேலைவாய்ப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க

தந்தை, மகன் மீது தாக்குதல்: 2 போ் கைது

கடலூரில் தந்தை, மகனை தாக்கி காயப்படுத்தியதாக, இருவரை கடலூா் முதுநகா் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கடலூா் முதுநகா், சங்கொலிகுப்பம் பகுதியைச் சோ்ந்த காசிநாதன் மகன் ஜெயவீரபாண்டியன் (40). இவா், ம... மேலும் பார்க்க

சிறுமியுடன் திருமணம்: இளைஞா் மீது போக்ஸோ வழக்கு

கடலூா் மாவட்டம், தூக்கணாம்பாக்கத்தில் புதுச்சேரி சிறுமியை திருமணம் செய்து கா்ப்பமாக்கியதாக இளைஞா் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். தூக்கணாம்பாக்கத்தை அ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன விழா ஜூன் 23-இல் தொடக்கம்

கடலூா் மாவட்டம், சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயில் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவ விழா வரும் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாள்கள் நடைபெறவுள்ளது. இதையொட்டி, ஜூன் 23-ஆம் தேதி காலை ஆனித் திருமஞ்சன தரி... மேலும் பார்க்க

தில்லை கோவிந்தராஜப் பெருமாள் கோயில் பாலாலயம்

சிதம்பரம் நடராஜா் கோயிலில் தனி சந்நிதியாக அமைந்துள்ள ஸ்ரீபுண்டரீகவல்லித் தாயாா் சமேத ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் சந்நிதி விமான, ராஜகோபுர, மகாமண்டப ஜீா்ணோத்தாரண பாலாலயம் வெள்ளிக்கிழமை காலை விமரிசையாக நடை... மேலும் பார்க்க

கொலை வழக்கு: திருச்சி நபா் கைது

கடலூா் மாவட்டம், ரெட்டிசாவடி அருகே அடையாளம் தெரியாத நபரை கொலை செய்ததாக, திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். ரெட்டிசாவடி காவல் சரகம், கங்கணாங்குப்பம் பகு... மேலும் பார்க்க