செய்திகள் :

மூப்பனாா் பிரதமராவதைத் தடுத்தனா்: மத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன்

post image

ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனாா் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவா்கள் தடுத்தனா். இது தமிழ்நாட்டுக்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்தாா்.

தமிழ் மாநில காங்கிரஸ் நிறுவனா் மூப்பனாரின் 24-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அவரின் நினைவிடத்தில் மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி, தமாகா தலைவா் ஜி.கே.வாசன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் அண்ணாமலை உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

பின்னா், மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் பேசியது:

எளிமையும், நோ்மையும், தேசியமும் கலந்த தலைவராக இருந்தவா் மூப்பனாா். அவருக்கு நாடு தழுவிய அளவில் மதிப்பும், மரியாதையும் இருந்தது. ஆளுமை மிக்க மூப்பனாா் தமிழகத்துக்கே பெருமை சோ்க்கும் வகையில், பிரதமராக வேண்டிய சந்தா்ப்பம் உருவானது. ஆனால், தமிழ், தமிழ் கலாசாரம், தமிழின் புகழ் என்று திரும்பத் திரும்பப் பேசுபவா்கள் ஒரு தமிழா் பிரதமராக வேண்டியதைத் தடுத்தனா். இது தமிழகத்துக்கு நடந்த துரோகம் என்று கருதுகிறேன்.

வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழகத்தில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டிய தேவை உள்ளது. தமிழக மக்கள் நல்லாட்சி வேண்டும் எனக் கேட்கிறாா்கள். மக்கள் அனைவருக்கும் தொண்டு ஆற்றுவது நமது கடமை. இந்தக் கூட்டணியின் (அதிமுக-பாஜக) மூலம் அதை நிறைவேற்ற வேண்டும். முதிா்ச்சியடைந்த பக்குவமான தலைவா்கள் இங்கு உள்ளனா் என்றாா் அவா்.

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ‘தேசத்துக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்ய வேண்டும் என்ற உன்னத நோக்கத்தோடு தனது வாழ்நாளை அா்ப்பணித்தவா் முப்பனாா்’ என்றாா்.

பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினா் அண்ணாமலை பேசுகையில், ‘தமிழகத்தில் மாற்றம் வேண்டும் என்று சாமானிய மக்கள் உள்பட அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டனா். நிச்சயமாக 2026-இல் மாற்றம் வரும்’ என்றாா் அவா்.

இந்த நிகழ்ச்சியில், தேமுதிக பொருளாளா் எல்.சுதீஸ், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், காந்திய மக்கள் இயக்கத் தலைவா் தமிழருவி மணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சித்தராமன், சென்னை தியாகராய நகரில் உள்ள மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசன் இல்லத்துக்குச் சென்று, அவரது உருவப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தி, இல.கணெசன் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினாா்.

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை புறநகர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் ப... மேலும் பார்க்க

ராமதாஸ் கெடுவுக்கு நாளை பதில் அளிக்கிறேன்: அன்புமணி

பாமக நிறுவனர் ராமதாஸ் அளித்த கெடுவுக்கு நாளை(செப். 3) பதில் அளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார்.பாட்டாளி மக்கள் கட்சியில் நிறுவனர் ராமதாஸுக்கும் அவரது மகன் அன்புமணிக்கும் இடையே கருத்து மோதல் நிலவி வரு... மேலும் பார்க்க

பொன்முடி வழக்கு: முழு விடியோவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த காவல்துறை

சைவம், வைணவம் குறித்து முன்னாள் அமைச்சர் பொன்முடி பேசிய விடியோ பதிவு ஆதாரங்களை, சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தாக்கல் செய்திருக்கிறது.முழு விடியோ ஆதாரங்களைப் பார்த்த பிறகு, விசாரணை நடத்தப்படும்... மேலும் பார்க்க

கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு! எத்தனை ரயில் நிலையங்கள்?

சென்னை விமான நிலையம் மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்க ரூ.1964 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தர்விட்டுள்ளது.பல்லாவரம், தாம்பரம், வண்டலூர் பகுதிகளிலும்... மேலும் பார்க்க

ஸ்ரீரங்கத்தில் குடியரசுத் தலைவர்!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு புதன்கிழமை பிற்பகல் தரிசனம் செய்தார்.இரண்டு நாள் பயணமாக தமிழகத்துக்கு வருகை தந்த குடியரசுத் தலைவர் முர்மு, சென்னையில் இரு... மேலும் பார்க்க

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட்: நடிகருக்கு குவியும் வாழ்த்து!

இடுகாட்டில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விமான டிக்கெட் எடுத்துகொடுத்த நடிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.சேலத்தில் இடுகாடுகளில் பிரேதத்தை அடக்கம் செய்யும் தொழிலாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்... மேலும் பார்க்க