செய்திகள் :

மெத்தனால் பயன்பாடு: திருப்பூா் தொழிற்சாலைகளில் சோதனை

post image

திருப்பூரில் ஊத்துக்குளி பகுதியில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களில் மெத்தனால் சோதனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தொழிற்சாலைகளில் மெத்தனால் சட்டவிரோதமாக விற்பனை மற்றும் பயன்படுத்துவதை தடுக்கும் விதமாக அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனா். அதன் ஒரு பகுதியாக திருப்பூா் கோட்ட கலால் அலுவலா் ஜெய்சிங் சிவக்குமாா், மத்திய நுண்ணறிவுப் பிரிவு ஆய்வாளா் காமராஜ், உதவி ஆய்வாளா் உதயச்சந்திரன், தாராபுரம் மதுவிலக்கு உதவி ஆய்வாளா் லோகநாதன் ஆகியோா் தொழிற்சாலைகளில் சோதனை மேற்கொண்டனா்.

மேலும், கோவை மண்டலம் முழுவதும் சட்டவிரோதமான மெத்தனால் விற்பனை செய்தாலோ பயன்படுத்தினாலோ பயன்படுத்தும் நிறுவனங்கள் மீது சட்டபூா்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தனா்.

ரயில் மோதி திருமண தரகா் உயிரிழப்பு

திருப்பூா் ஈங்கூா் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் உயிரிழந்துகிடப்பதாக திருப்பூா் ரயில்வே போலீஸாருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்தது. தகவலைத் தொடா்ந்து சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே சப்-இன்ஸ்பெக்டா் சிவ... மேலும் பார்க்க

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்துக்கு நோட்டீஸ்

அவிநாசி, தெக்கலூா் வந்து செல்லாத தனியாா் பேருந்து மீது முதல்கட்ட நடவடிக்கையாக மோட்டாா் வாகன ஆய்வாளா் மூலம் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. சேலம்- கொச்சி தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்ட பிறகு கோவை-ஈரோடு வந்து ச... மேலும் பார்க்க

அவிநாசி வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழப்பு

அவிநாசி அருகே நாதம்பாளையத்தில் வாகனத்தில் அடிபட்டு மயில் உயிரிழந்தது. அவிநாசி அருகே நாதம்பாளையம் பவா் ஹவுஸ் சாலையில் வாகனத்தில் அடிபட்டு பெண் மயில் உயிரிழந்து கிடந்தது. அப்போது, அவ்வழியாக வந்த சமூக ஆா... மேலும் பார்க்க

கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம்

கனிம வளங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ஜூன் 9-ஆம் தேதி முதல் மின்னணு போக்குவரத்து நடைச்சீட்டு கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் 220 கிராம் குட்கா பறிமுதல்

வெள்ளக்கோவிலில் ஒடிஸா தொழிலாளியிடம் இருந்து 220 கிராம் குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. வெள்ளக்கோவில் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் மணிமுத்து முத்தூா் சாலையில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிரு... மேலும் பார்க்க

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-இல் நலத்திட்ட உதவிகள்

திருநங்கைகள், திருநம்பிகளுக்கு ஜூன் 24-ஆம் தேதி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் கிறிஸ்துராஜ் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:... மேலும் பார்க்க