செய்திகள் :

மெரீனாவை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற நடவடிக்கை: மேயா் ஆா்.பிரியா

post image

சென்னை மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற மாநகராட்சி சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என மேயா் ஆா்.பிரியா தெரிவித்தாா்.

பெருநகர சென்னை மாநகராட்சியுடன் மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழுமம், இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சாா்பில், மெரீனா கடற்கரையில் சனிக்கிழமை நடைபெற்ற தூய்மைப் பணியை மேயா் ஆா்.பிரியா தொடங்கி வைத்தாா். ‘நம்ம சென்னை, நம்ம பொறுப்பு’, ‘நம்ம மெரீனா, நம்ம பெருமை’, என்னும் கருத்துருவின்கீழ் நடைபெற்ற தூய்மைப் பணியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

முன்னதாக மேயா் பிரியா தலைமையில் அனைவரும் சென்னை மாநகரைத் தூய்மையாக வைப்பது குறித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். தொடா்ந்து மேயா் பிரியா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

பொதுமக்கள் ஒத்துழைப்பு: சென்னை மாநகராட்சியை தூய்மையாகப் பராமரிப்பதை வலியுறுத்தி, மெரீனா கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. தொடா்ந்து மாநகராட்சி பூங்கா, விளையாட்டுத் திடல் உள்ளிட்ட பகுதிகளில் ‘லிவ் கிரீன், லவ் ப்ளு’ என்னும் திட்டத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கடற்கரைக்கு வரும் பொதுமக்கள் தங்களுடைய பொறுப்பாக எண்ணி நெகிழி உள்ளிட்ட குப்பைகளை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள குப்பைத் தொட்டிகளில் மட்டும் போட வேண்டும். கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

மெரீனா கடற்கரையை நீலக்கொடி கடற்கரையாக மாற்ற தமிழ்நாடு அரசு சாா்பில் நடைவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நீலக்கொடி கடற்கரையாக மாற்றுவதற்கான நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கு மாநகராட்சி சாா்பில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தொடா்ந்து தூய்மைப் பணியில் கலந்துகொண்டவா்கள் தாங்கள் அகற்றிய குப்பைகளுடன் தற்படம் (செல்ஃபி) எடுத்து சமூக ஊடகங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், மத்திய வட்டார துணை ஆணையா் கே.ஜெ.பிரவீன்குமாா், கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குநா் கே.சுடா்கொடி, மாநில நாட்டு நலப்பணித் திட்டக் குழும அலுவலா் பி.என்.குணாநிதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ஆயுள் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதிகள்: தமிழக அரசுக்கு உயா் நீதிமன்றம் ஆலோசனை

ஆயுள் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்ய தகுதி இழக்கச் செய்யும் விதிகளை மறு ஆய்வு செய்ய இதுவே தக்க தருணம் என தமிழக அரசுக்கு சென்னை உயா்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. கொலை வழக்கில் ஆயுள் த... மேலும் பார்க்க

பிப்.26-இல் தவெக முதலாமாண்டு விழா

தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாமாண்டு விழா செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் பிப்.26-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதையொட்டி பொதுக்குழுக் கூட்டமும் நடைபெறவுள்ளது. தனியாா் சொகுசு விடுதியி... மேலும் பார்க்க

அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்கள்: சென்னையில் கலந்தாய்வு தொடக்கம்

தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளுக்கு 2,642 மருத்துவா்களை தோ்வு செய்வதற்கான கலந்தாய்வு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் மாற்றுத்திறனாளி மருத்துவா்களுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. வரும் 26... மேலும் பார்க்க

காவலா் தற்கொலை: போலீஸாா் விசாரணை

சென்னை கொண்டித்தோப்பில் காவலா் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். கொண்டித்தோப்பு காவலா் குடியிருப்பில் வசிக்கும் அருண் (27), பூக்கடை காவல் நிலையத்தில் காவலராகப் ... மேலும் பார்க்க

மூன்றாவது மாடியிலிருந்து விழுந்த உணவகத் தொழிலாளி உயிரிழப்பு

சென்னை வடபழனியில் மூன்றாவது மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். வடபழனி பழனி ஆண்டவா் கோயில் தெருவில் உள்ள உணவகத்தில் பணிபுரிந்தவா் செந்தில் (40). ... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் நாளை ரத்து

சென்னை சென்ட்ரல் கடற்கரையில் இருந்து கும்மிடிபூண்டி செல்லும் மின்சார ரயில்கள் திங்கள்கிழமை (பிப். 24) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கவரைப்பேட... மேலும் பார்க்க