செய்திகள் :

மேக்கேதாட்டு வழக்கு: உச்சநீதிமன்றத்தில் செப். 23-இல் விசாரணை

post image

நமது நிருபர்

புது தில்லி: மேக்கேதாட்டு திட்டம் தொடர்பான வழக்கை செப். 23}ஆம் தேதி விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் உத்தரவிட்டுள்ளார்.

மேக்கேதாட்டில் 67.16 டிஎம்சி கொள்ளளவு கொண்ட அணை கட்டுவது தொடர்பாக கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) தயாரிப்பதைத் தடுக்கக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் 2018} ஆம் ஆண்டு வழக்குத் தொடுத்தது.

தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், புதுச்சேரி ஆகியவற்றுக்கு இடையிலான காவிரி நதிநீர்ப் பங்கீட்டு பிரச்னை தொடர்பான வழக்கில் இறுதித் தீர்ப்பு 05.02.2007}இல் காவிரி நதிநீர் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்டது. அதை 16.02.2018}இல் உச்சநீதிமன்றம் சில மாற்றங்களுடன் உறுதிப்படுத்தியது.

அதன்பிறகு ரூ.5,912 கோடி மதிப்பீட்டில் காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு திட்டத்தைச் செயல்படுத்துவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கையை 04.08.2018}இல் கர்நாடக அரசு அந்த மாநில சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. இதற்கு ஆட்சேபம் தெரிவித்து 17.09.2018}இல் மத்திய நீர்வள ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் அனுப்பியது.

இதற்கிடையே, மேக்கேதாட்டு தடுப்பணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க 22.11.2018}இல் கர்நாடகத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி வழங்கியது. இதற்குத் தடை கோரி தமிழகம் சார்பில் 30.11.2018}இல் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது. அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.

இந்நிலையில், மேக்கேதாட்டு வழக்கை விரைந்து விசாரிக்குமாறு, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் திங்கள்கிழமை கர்நாடக அரசு முறையிட்டது. இதையடுத்து, இந்த வழக்கை செப்டம்பர் 23}ஆம் தேதி முன்னிலைப்படுத்திப் பட்டியலிடுமாறு தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் உத்தரவிட்டார்.

ஒரு கோடி பேரை கொல்ல 400 கிலோ ஆர்டிஎக்ஸ்! விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்துக்கு அச்சுறுத்தல்!

மும்பை நகரத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மும்பையில் விநாயகர் சதுர்த்தி திருநாள் கொண்டாட்டம் முடிவடையும் நிலையில், சனிக்கிழமையில் நீர்நி... மேலும் பார்க்க

அயோத்தியில் சுவாமி தரிசனம் செய்தார் பூட்டான் பிரதமர் ஷெரிங் டோப்கே!

பூட்டான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே அயோத்தி ராமர் கோயில் மற்றும் பிற முக்கிய கோயில்களில் வழிபாடு மேற்கொண்டார். இந்திய விமானப்படையின் சிறப்பு விமானம் மூலம் 9.30 மணியளவில் அயோத்தி விமான நிலையத்தில் பிரத... மேலும் பார்க்க

ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் தொடங்கியது!

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகின்றது.செப்டம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில் ஆர்எஸ்எஸ் ... மேலும் பார்க்க

45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் முர்மு!

நாடு முழுவதிலுமிருந்து 45 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கினார்.ஆசிரியராக பணியாற்றி குடியரசுத் தலைவராக உயர்ந்தவர் ராதாகிருஷ்ணன். அவரை கௌரவிக்கும் வகை... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீர்திருத்தங்களால் அரசுக்கு ரூ 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும்: எஸ்பிஐ

கொல்கத்தா: ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் மூலம் மத்திய அரசுக்கு ரூ. 3,700 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என்று பாரத ஸ்டேட் வங்கியின் ஆய்வில் தெரியவந்துள்ளது.மேலும், இந்த சீர்திருத்தத்தால் நிகர நிதி தாக்கமானது... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயில் யாத்திரை: 11வது நாளாக நிறுத்தம்!

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி குகைக் கோயில் யாத்திரை தொடர்ந்து 11வது நாளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.ஆகஸ்ட் 26 அன்று கத்ரா பெல்ட்டின் திரிகுடா மலைகளில் உள்ள அத்குவாரியில... மேலும் பார்க்க