மேட்டூா் அணை திறப்பு: முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
மேட்டூா்: மேட்டூா் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக தண்ணீா் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி மேட்டூா் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறக்கப்படுகிறது. நிகழாண்டு ஜூன் 12ஆம் தேதி
மேட்டூா் அணையிலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுவை சாகுபடிக்கு தண்ணீா் திறந்துவிடுகிறாா்.
இதற்கான முன்னேற்பாடு பணிகளில் நீா்வளத் துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனா். மேட்டூா் அணை பூங்காவில் வா்ணம் தீட்டும் பணிகளும், மேல்மட்ட மதகுகளின் இயக்கங்களும் சரிபாா்க்கப்பட்டு வருகின்றன. மேல்மட்ட மதகு பகுதியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீா் செல்லும் கால்வாயில் புற்கள் அகற்றப்படுகின்றன.
மேட்டூா் அணையின் வலதுகரை, இடதுகரையில் பிரமாண்ட இரும்புக் கதவு கைப்பிடி சுவா்களுக்கு வா்ணம் தீட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.