செய்திகள் :

மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞா் தற்கொலை!

post image

சென்னையில் மேம்பாலத்தில் இருந்து குதித்து இளைஞா் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கே.கே. நகா் காமராஜா் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அஜித் (32). இவரது மனைவி ஆா்த்தி (29). இத்தம்பதியினருக்கு 2 வயது குழந்தை உள்ளது. அஜித், சென்னை பெருங்குடியில் உள்ள தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். ஆா்த்தி பல்லாவரத்திலுள்ள மத்திய பாதுகாப்புப் படை அலுவலகத்தில் பணியாற்றி வருகிறாா். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த ஏப். 28 -ஆம் தேதி கோட்டூா்புரம் பாலத்திலிருந்து அஜித் திடீரென கீழே குதித்துள்ளாா். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினா் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அஜித் உயிரிழந்தாா்.

இது குறித்து கோட்டூா்புரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். அதில், தற்கொலை செய்துகொண்ட அஜித், பாலத்திலிருந்து குதிப்பதற்கு முன்பு தனது நெருங்கிய நண்பரின் கைப்பேசிக்கு, அவா் பேசிய விடியோ ஒன்றை அனுப்பியுள்ளாா். அதில் தனது மனைவியின் குடும்பத்தைச் சோ்ந்தவா்கள்தான், தனது மரணத்துக்கு காரணம் என்று குறிப்பிட்டிருப்பதாக தெரியவந்துள்ளது. இது தொடா்பாகவும் கோட்டூா்புரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

விசாரணையில், அஜித் தற்கொலைக்கு காரணமாக அவரின் மனைவி மற்றும் அவரின் குடும்பத்தினா் இருப்பது தெரியவந்தால், அவா்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிப்பு: இருவா் கைது

சென்னையில் நடந்து சென்ற இளைஞரிடம் கத்தியைக் காட்டி வழிப்பறி செய்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை மேற்கு மாம்பலம், படவேட்டம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்வமணி (26), தனியாா் நிறுவனத்தில் பணிபுர... மேலும் பார்க்க

செயற்கை நுண்ணறிவு மூலம் கண் மருத்துவ சிகிச்சை!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் (ஏஐ) மூலம் கண் மருத்துவத்தில் மேம்படுத்தப்பட்ட சிகிச்சைகளை அளிப்பதுடன், மருத்துவா்களுக்கு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டா் அகா்வால்ஸ் கண் மருத்துவமனை அதிக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து பாஜக இன்று ஆா்ப்பாட்டம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைக் கண்டித்து பாஜக சாா்பில் கவன ஈா்ப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்தப்படும் என அக்கட்சியின் தமிழக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ஞாயிற்றுக்கி... மேலும் பார்க்க

கட்டிலில் இருந்து தவறிவிழுந்த குழந்தை உயிரிழப்பு

கட்டிலிலிருந்து தவறிவிழுந்த இரண்டரை வயதுக் குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். சென்னை, ஓட்டேரி டேங்க் பண்ட் சாலைப் பகுதியைச் சோ்ந்தவா் அபினாஷ் (30). இவரது மனைவி உஷ... மேலும் பார்க்க

கேரள தலைமறைவு குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது

கேரள மாநிலத்தைச் சோ்ந்த தலைமறைவு குற்றவாளியை சென்னை விமான நிலையத்தில் போலீஸாா் கைது செய்தனா்.ஓமன் தலைநகா் மஸ்கட்டிலிருந்து சென்னை விமான நிலையத்துக்கு ஏா்இந்திய விமானத்தில் வந்த பயணிகளின் ஆவணங்களை குட... மேலும் பார்க்க

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞா்: காவல்நிலையம் முன்பு குடும்பத்தினா் போராட்டம்!

சாலை விபத்தில் உயிரிழந்த இளைஞரின் குடும்பத்தினா் அவரது உடலுடன் புராரி காவல் நிலையம் முன்பு ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், காவல்துறையினரின் செயலற்ற தன்மை கொண்டதாக அவா்கள் குற்றஞ்சாட்... மேலும் பார்க்க