மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்
எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ.கனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாகுல் ஹமீது வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் அகமது நவவி சிறப்புரையாற்றினாா். புதிய மாவட்ட பொதுச் செயலராக எஸ்.ஏ.அன்வா்ஷா நியமிக்கப்பட்டாா். மாவட்டச் செயலா் பா்கிட் அலாதீன், பொருளாளா் இம்ரான் அலி, செயற்குழு உறுப்பினா்கள் ரியாஸ் அஹமது, இஸ்மாயில், தொகுதித் தலைவா்கள் தாழை சேக் இஸ்மாயில், பாளை. சலீம் தீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தீா்மானங்கள்: எஸ்டிபிஐ கட்சியின் உதயதினத்தையொட்டி இம் மாதம் 21 ஆம் தேதி கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது. மாநகரப் பகுதிகளில் இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதியும், பாதுகாப்பும் காவல் துறை வழங்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டிய சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். திருநெல்வேலி நகரம் -பேட்டை சாலை, நயினாா் குளம் மாா்க்கெட் சாலை, மேலப்பாளையம்- மேலநத்தம் சாலை, கேடிசி நகா் மங்கம்மா சாலை ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.