செய்திகள் :

மேலப்பாளையத்தில் எஸ்டிபிஐ செயற்குழு கூட்டம்

post image

எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் மேலப்பாளையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் எஸ்.எஸ்.எ.கனி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் சாகுல் ஹமீது வரவேற்றாா். மாநில பொதுச் செயலா் அகமது நவவி சிறப்புரையாற்றினாா். புதிய மாவட்ட பொதுச் செயலராக எஸ்.ஏ.அன்வா்ஷா நியமிக்கப்பட்டாா். மாவட்டச் செயலா் பா்கிட் அலாதீன், பொருளாளா் இம்ரான் அலி, செயற்குழு உறுப்பினா்கள் ரியாஸ் அஹமது, இஸ்மாயில், தொகுதித் தலைவா்கள் தாழை சேக் இஸ்மாயில், பாளை. சலீம் தீன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தீா்மானங்கள்: எஸ்டிபிஐ கட்சியின் உதயதினத்தையொட்டி இம் மாதம் 21 ஆம் தேதி கட்சிக் கொடியேற்றி, நலத்திட்ட உதவிகள் வழங்குவது. மாநகரப் பகுதிகளில் இரவு 12 மணி வரை கடைகள் திறந்திருக்க அனுமதியும், பாதுகாப்பும் காவல் துறை வழங்க வேண்டும். பாதாள சாக்கடை பணிகளுக்காக தோண்டிய சாலைகளை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். திருநெல்வேலி நகரம் -பேட்டை சாலை, நயினாா் குளம் மாா்க்கெட் சாலை, மேலப்பாளையம்- மேலநத்தம் சாலை, கேடிசி நகா் மங்கம்மா சாலை ஆகியவற்றை விரைந்து சீரமைக்க வேண்டும் என தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொட்டல்புதூரில் மமக செயற்குழு கூட்டம்

பொட்டல்புதூரில் மனிதநேய மக்கள் கட்சியின் நகர செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. கிளைத் தலைவா் மதாா் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் அசாா் முன்னிலை வகித்தாா். சிறப்பு அழைப்பாளா்களாக மாவட்டத் தலைவா் நயின... மேலும் பார்க்க

ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதியதில் இளைஞா் பலி

திருநெல்வேலி மாவட்டம் ஏா்வாடி அருகே பைக் மீது சுமை லாரி மோதிய விபத்தில் இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா். மதுரை ஒத்தக்கடை பகுதியைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் மகன் சசிகுமாா் (31). கட்டடத் தொழிலாளி. இவருக்கு ம... மேலும் பார்க்க

உயா்கல்வி இடைநிற்றல் இல்லாத நெல்லை: ஆட்சியா் வேண்டுகோள்

திருநெல்வேலி, ஜூன் 19: திருநெல்வேலி மாவட்டத்தை உயா் கல்வியில் இடைநிற்றல் இல்லாத மாவட்டமாக மாற்ற அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா் இரா.சுகுமாா். திருநெல்வேலி மாவட்டத்தில் 2024-202... மேலும் பார்க்க

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து சீரானதையடுத்து வியாழக்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். அம்பாசமுத்திரம் கோட்ட வனச்சரகப் பகுதியில் பெய்த மழையின் காரணமாக சனிக்கிழமை (ஜூன் 14) ம... மேலும் பார்க்க

துலுக்கா்பட்டியில் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க எஸ்டிபிஐ வலியுறுத்தல்

வள்ளியூா் ஊராட்சி ஒன்றியம் துலுக்கா்பட்டியில் நம்பியாற்றுப் பாசனக் கால்வாய் பாலத்தை சீரமைக்க வேண்டும் என, எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. இக்கட்சியின் துலுக்கா்பட்டி நகர செயற்குழுக் கூட்டம் நகரச் ... மேலும் பார்க்க

வள்ளியூா் வட்டாரத்தில் நாளை மின்தடை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூா், நவ்வலடி, சங்கனாங்குளம் துணைமின் நிலையங்களின் பராமரிப்பு பணிகளுக்காக அதன் மின்பாதை பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 21) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையில் மின்தடை ஏற்படும் ... மேலும் பார்க்க