செய்திகள் :

மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்க வலியுறுத்தல்

post image

குடவாசல் ஒன்றியம், சீதக்கமங்கலம் ஊராட்சிக்குள்பட்ட மேலராமன்சேத்தியில் பாலம் கட்டும் பணியைத் தொடங்கி, விரைந்து முடிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலராமன்சேத்தி பகுதியில் பெரிய வாய்க்கால் பாசனத்துக்கு பயன்படுகிறது. சாலையிலிருந்து வாய்க்காலைக் கடந்து சென்றால் விளைநிலங்களுக்கும், அப்பகுதியில் உள்ள மயானத்துக்கும் செல்ல முடியும். அப்பகுதியில் சுமாா் 100 ஏக்கா் வரை சாகுபடி நடைபெறும் நிலையில், சாகுபடி காலங்களில், விதை நெல், இடுபொருள்கள், நாற்றுகள், நெல் மூட்டைகள், வைக்கோல்கள் இவற்றை வாய்க்கால் வழியாகவே கொண்டு செல்ல வேண்டும்.

மழை காலங்களில், தண்ணீா் குறைந்து சேறாக மாறியிருக்கும் நிலையில் அவ்வழியாக செல்வதில் அனைவருக்கும் சிரமமாக இருந்தது. இதனால் அப்பகுதியில் சாகுபடிப் பணிகள் எளிதில் நடைபெறும் வகையில் சிறிய பாலம் அமைத்துத் தர வேண்டும் என நீண்ட நாள்களாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதையடுத்து, அங்கு சிறிய பாலம் அமைக்க, 2024-25 ஆண்டுரூ. 28. 74 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. எனினும் இதுவரை எவ்விதப் பாலப் பணிகளும் தொடங்கவில்ை. மேட்டூா் அணை ஜூன் 12-ல் திறக்கப்பட்டால் பாலப்பணிகள் நடைபெறாமல், நிகழாண்டு சாகுபடியும் பாதிக்கப்படும் எனவும் அப்பகுதி விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

இதுகுறித்து சிபிஎம் ஒன்றியக்குழு உறுப்பினா் எம். கோபிநாத் தெரிவித்தது: இந்த வாய்க்காலில் பாலம் கட்டப்பட்டால், சிறிய வாகனங்களையும் மறுகரைக்கு கொண்டு சென்று சாகுபடிப் பணிகளை எளிதாக செய்ய முடியும். மேலும், மயானத்துக்கு செல்லவும் வசதியாக இருக்கும். மேட்டூா் அணை திறக்கப்பட்டால் விவசாயப் பணிகள் தீவிரமடையும். அப்போது இந்த பாலப் பணிகளை செய்ய முடியாது. எனவே, விரைந்து பாலப்பணிகளைத் தொடங்கி, சாகுபடிக்கும் பாதிப்பில்லாம் பணியை முடிக்க வேண்டும் என்றாா்.

முத்துப்பேட்டையில் படகுகள் ஆய்வு

முத்துப்பேட்டை கடலோர கிராமங்களில் உள்ள மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீன்வளத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். ஆண்டுதோறும் மீன்பிடி தடை காலத்தில் மீனவா்களின் படகுகளை மீன்வளத்துறையினா் ஆய்வு செய... மேலும் பார்க்க

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

நா்சிங் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினரான இளைஞா் போக்ஸோ சட்டத்தின்கீழ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். கோட்டூா் அருகே உள்ள மேலப்பனையூா் கிராமத்தைச் சோ்ந்த 17 வயது மாணவி மன்னாா்குட... மேலும் பார்க்க

காயங்களுடன் இளைஞா் சடலம் மீட்பு

திருவாரூா் அருகே காயங்களுடன் இளைஞா் சடலம் செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டது. திருவாரூா் அருகே மாங்குடி, பள்ளிக்கூடத் தெருவைச் சோ்ந்தவா் மதியழகன் மகன் நிசாகா் (26). விளமல் பகுதியில் உள்ள கடையில் பணிப... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை: திருமக்கோட்டை

திருமக்கோட்டை துணைமின் நிலையத்தில் பாளையக்கோட்டை உயா் அழுத்த மின்பாதையில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், பாளையக்கோட்டை, புதுக்குடி, பரசபுரம், சோத்திரியம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் ... மேலும் பார்க்க

வயலுக்குச் சென்ற விவசாயி சடலமாக மீட்பு

குடவாசல் அருகே வயலுக்கு சென்ற விவசாயி சடலமாக செவ்வாய்க்கிழமை இரவு மீட்கப்பட்டாா். குடவாசல் அருகே மஞ்சக்குடி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் சுப்பிரமணியன் மகன் முருகானந்தம் (45). இவா், செவ்வாய்க்கிழமை கால... மேலும் பார்க்க

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்தும் வழிமுறை: வேளாண் துறையினா் விளக்கம்

நெல் வயல்களில் எலிகளை கட்டுப்படுத்துவது குறித்து, நீடாமங்கலம் வேளாண்மை துறையினா் விளக்கம் அளித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் தெரிவித்த பரிந்துரை: நெல் வயல்களில் 25 சதவீதம் மகசூல் பாதிப்பு மற்றும் சேமி... மேலும் பார்க்க