செய்திகள் :

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி

post image

மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.

இத்துடன் சோ்த்து மொத்தம் 604 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு ஏற்றுமதி செய்யும் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

இது, கடல் உணவு ஏற்றுமதியில் உலகிலேயே இரண்டாம் இடத்தில் உள்ள இந்தியாவுக்கு ஏற்றுமதியில் 20 சதவீதம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த இந்தியாவின் இந்த ஏற்றுமதி கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. கடல் உணவு ஏற்றுமதியில் இந்திய நிறுவனங்கள் கடைப்பிடித்து வரும் தரமும் இந்த அனுமதிக்கு காரணமாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

கடந்த 2023-24-ஆம் ஆண்டுகளில் ஐரோப்பிய யூனியனுக்கு இந்திய கடல் உணவு ஏற்றுமதி 1.1 பில்லியன் டாலராக (சுமாா் ரூ.9,705 கோடி) இருந்தது. அதே வேளையில், 2024-25-ஆம் ஆண்டில் இறால் ஏற்றுமதி மட்டும் 4.88 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.42,350 கோடி) நடைபெற்றுள்ளது. இது மொத்த கடல் உணவு ஏற்றுமதியில் 66 சதவீதமாகும்.

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் பாதிக்கப்பட்டிருந்த இறால் ஏற்றுமதியும், ஐரோப்பிய யூனியன் அனுமதியால் பலனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், சீனா, ஜப்பான், வியத்நாம், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்குப் பெரும்பாலான கடல் உணவு ஏற்றுமதியை இந்தியா மேற்கொண்டுள்ளது.

டயரில் எலுமிச்சை வைத்து பூஜை! மஹிந்திரா தாரை கரப்பான் பூச்சி போல கவிழ்த்த பெண்!!

கிழக்கு தில்லியின் நிர்மான் விகார் பகுதியில், புதிதாக வாங்கிய மஹிந்திரா தார் என்ற ஜீப்பை, எலுமிச்சை மீது ஏற்ற முயன்ற பெண், அதனை முதல் மாடியிலிருந்து கீழே கரப்பான் பூச்சி போல கவிழ்த்த விடியோ சமூக வலைத்... மேலும் பார்க்க

ஜம்மு - காஷ்மீரில் எம்எல்ஏ கைதுக்கு எதிராக போராட்டம்! ஊரடங்கு அமல்!

ஜம்மு - காஷ்மீர் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மேராஜ் மலிக்கின் கைதுக்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில் டோடா ... மேலும் பார்க்க

ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: உ.பி.யில் பாஜகவினர் போராட்டம்!

பிரதமர் மோடியின் தாயார் மீது அவதூறு கருத்துக்கள் கூறியதற்குக் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங் தலைமையில் நெடுஞ்சாலையில் போராட்டத... மேலும் பார்க்க

மறைந்த தொழிலதிபரின் ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? நீதிமன்றத்தை நாடிய நடிகை!

நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் உயிரிழந்த நிலையில், அவரின் சொத்து யாருக்குச் சொந்தம்? என குடும்பத்தினுள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தொழிலதிபரும் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவருமான ... மேலும் பார்க்க

சிறையில் சூரிய ஒளியைகூட பார்க்க விடுவவில்லை... எனக்கு விஷம் கொடுங்கள்! நடிகர் தர்ஷன் கதறல்

சிறையில் சூரிய வெளிச்சத்தைகூட பார்க்க அனுமதிப்பதில்லை, இதற்கு பதிலாக எனக்கு விஷம் கொடுங்கள் என்று நடிகர் தர்ஷன் தெரிவித்துள்ளார்.கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள தர்ஷன், பெங்களூரு மத்திய சிறையில் இர... மேலும் பார்க்க

கான்ஜுரிங் படத்தின் சுவாரசியத்தை குலைத்த ரசிகரால் திரையரங்கில் அடிதடி!

மும்பையில் திரையரங்கினுள் படத்தின் கதையை முன்கூட்டியே சொல்லி, படத்தின் சுவாரசியத்தைக் குலைத்ததை தட்டிக்கேட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர்.புணேவில் ஹாலிவுட் பேய்ப் படமான கான்ஜுர... மேலும் பார்க்க