செய்திகள் :

மே தினத்தில் விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை

post image

பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களில் தொழிலாளா் தினத்தன்று (மே 1) விடுமுறை அளிக்காத 24 நிறுவனங்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மற்றும் அரியலூா் மாவட்டங்களில் உள்ள பல்வேறு நிறுவனங்களில், தமிழ்நாடு தொழில் நிறுவனங்கள் தேசிய மற்றும் பண்டிகை விடுமுறை நாள்கள் சட்டத்தின் கீழ், தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா். தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி தலைமையில், வா்த்தக நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள், உணவகங்கள் உள்பட 57 நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில், 17 கடைகள் மற்றும் 7 உணவு நிறுவனங்கள் என மொத்தம் 24 நிறுவனங்கள் சட்ட விதிகளை மீறியது கண்டறியப்பட்டு, சட்ட நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) கா. மூா்த்தி கூறியது:

மேற்கண்ட 24 நிறுவனங்களும், தொழிலாளா் தினத்தன்று விடுமுறை அளிக்காமலும், பணிபுரிந்த தொழிலாளா்களுக்கு இரட்டிப்புச் சம்பளம் வழங்க அல்லது மாற்று விடுப்பு வழங்க 24 மணி நேரத்துக்கு முன்னதாக அறிவிப்பு வழங்கி, அதன் நகலை சம்பந்தப்பட்ட தொழிலாளா் உதவி ஆய்வாளா்களுக்கு அனுப்பி ஒப்புதல் பெறாமல், தொழிலாளா்களை பணிக்கு அமா்த்தியதால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் கைது

பெரம்பலூா் அருகே அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த நடேசன் மகன் ரத்தினம் (60). கழைக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை குன்னம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நில... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க