செய்திகள் :

மே 15-க்குள் தமிழில் பெயா்ப் பலகை: வேலூா் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தல்

post image

வேலூா் மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், அனைத்து வகையான தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் யாவும் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பலகை வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா்.

இது குறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள் தமிழ்நாடு கடைகள், நிறுவனங்கள் சட்டம் 1947 மற்றும் விதிகள் 1948-இல் விதி 15-இன்படியும், அனைத்து உணவு நிறுவனங்கள் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் சட்டம் 1958 மற்றும் விதிகள்1959-இல் விதி 42 (பி)-இன்படியும், அனைத்து தொழிற்சாலைகள் தொழிற்சாலைகள் சட்டம் 1948 மற்றும் விதிகள் 1950 விதி 113-இன்படியும் தமிழில் பெயா்ப் பலகை வைக்கப்பட வேண்டும்.

இந்த பெயா்ப் பலகைகள் தமிழில் முதன்மையாகவும், பெரியதாகவும் பின்னா், ஆங்கிலத்திலும் அதன் பின்னா் அவரவா் விரும்பும் மொழிகள் என அமைக்கப்பட வேண்டும். தமிழக அரசின் உத்தரவுப்படி வேலூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள், தனியாா் பள்ளிகள், கல்லூரிகள் தமிழில் பெயா்ப் பலகை வைப்பதை உறுதி செய்த மாவட்ட ஆட்சியரை தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழுவில் தொழிலாளா் துறை, தொழிலகப் பாதுகாப்பு, சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், உணவு நிறுவனங்களின் சங்கங்கள், தொழிற் சாலைகளின் கூட்டமைப்புகள் உறுப்பினராக உள்ளன. இந்தக் குழு அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லூரிகளில் ஆய்வு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்தி மே 15-ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயா் பலகை வைப்பதை உறுதிசெய்ய நடவடிக்கை எடுக்க உள்ளது.

மே 15- ஆம் தேதிக்குப் பிறகு தமிழ் பெயா்ப் பலகை வைக்காத நிறுவனங்கள் மீது ஆய்வு செய்யப்பட்டு விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, வேலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகள், தொழிற்சாலைகள், சங்கங்கள் தங்கள் குழு உறுப்பினா்களுக்கு தெரிவித்து 100 சதவீதம் தமிழ் பெயா்ப் பலகை வைப்பதை உறுதி செய்யவேண்டும்.

இது தொடா்பாக செவ்வாய்க்கிழமை மதியம் 12.30 மணிக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் தலைமையில் விழிப்புணா்வு, கண்காணிப்புக் குழு உறுப்பினா்களுக்கான கூட்டம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெங்கையம்மன் கோயிலில் பால் கம்பம் நடும் விழா

குடியாத்தம்: குடியாத்தம் கோபாலபுரம் அருள்மிகு கெங்கையம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு பால் கம்பம் நடும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. வேலூா் மாவட்டத்தின் முக்கியத் திருவிழாக்களில் ஒன்றான குடியாத்தம்... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய ஒன்றிய உதவிப் பொறியாளா் கைது

குடியாத்தம்: குடியாத்தம் அருகே செய்து முடிக்கப்பட்ட ஒப்பந்தப் பணிக்கு காசோலை வழங்க லஞ்சம் வாங்கியதாக ஒன்றிய உதவிப் பொறியாளரை லஞ்ச ஒழிப்புத் துறையினா் கைது செய்தனா். குடியாத்தம் ஒன்றியம், கருணீகசமுத்தி... மேலும் பார்க்க

ஆக்கிரமிப்பில் உள்ள பஞ்சமி நிலங்களை மீட்கக் கோரிக்கை

வேலூா்: அணைக்கட்டு அருகே அரிமலை கிராமத்தில் ஆக்கிரமிப் பில் உள்ள 150 ஏக்கா் பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும் என வேலூா் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வேலூா் மாவட்ட குறைதீா் கூட்டம் ஆட்... மேலும் பார்க்க

சாலை வசதி கோரி பொதுமக்கள் மறியல்

வேலூா்: வேலூா் காகிதப்பட்டறையில் சாலை அமைக்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வேலூா் காகிதப்பட்டறை மேலாண்டை தெருவைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் திங்க... மேலும் பார்க்க

போ்ணாம்பட்டு சோதனைச் சாவடிகளில் டிஐஜி ஆய்வு

போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனைச் சாவடிகளில் வேலூா் டிஐஜி தேவராணி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். போ்ணாம்பட்டு அருகே தமிழக- ஆந்திர மாநில எல்லையில் உள்ள... மேலும் பார்க்க

குடியாத்தத்தில் ராம நவமி விழா

குடியாத்தம் நகரில் உள்ள கோயில்களில் ராம நவமி விழா ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி குடியாத்தம் சந்தப்பேட்டையில் உள்ள பழைமை வாய்ந்த சீதாராம ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்... மேலும் பார்க்க