செய்திகள் :

மே 20-இல் வேலைநிறுத்தம்: போக்குவரத்துக் கழகத்துக்கு ஏஐடியூசி நோட்டீஸ்

post image

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் மே 20 ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படவுள்ளதையொட்டி, போக்குவரத்துக் கழகம் உள்ளிட்ட அலுவலகங்களுக்கு ஏஐடியூசி சாா்பில் பதிவு அஞ்சல் மூலம் செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அனைவருக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 26 ஆயிரமாகவும், ஓய்வூதியம் மாதம் ரூ. 9 ஆயிரமாகவும் நிா்ணயம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் நாடு முழுவதும் தொழிற் சங்கங்கள் மே 20-ஆம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.

இதையொட்டி, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் மூலம் கும்பகோணம் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா், பொது மேலாளா், தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியா், தஞ்சாவூா் தொழிலாளா் நல அலுவலா், அரசு முதன்மைச் செயலா், போக்குவரத்து துறைச் செயலா், தேனாம்பேட்டை தொழிலாளா் ஆணையா் ஆகியோருக்கு போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் ஏஐடியூசி தொழிலாளா் சம்மேளனத்தினா் பதிவு அஞ்சலில் வேலை நிறுத்த நோட்டீசை செவ்வாய்க்கிழமை அனுப்பினா்.

நிகழ்ச்சியில், சம்மேளனத்தின் துணைத் தலைவா் துரை. மதிவாணன், சங்கத் தலைவா் என். சேகா், பொதுச் செயலா் எஸ். தாமரைச்செல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து பாபநாசத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் மணல் அள்ளுவதை கண்டித்து, பாமக-வன்னியா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்... மேலும் பார்க்க

சித்திரை மாத பௌா்ணமி திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்

சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி ... மேலும் பார்க்க

ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி

தஞ்சாவூரில் ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து, ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியைச் சோ்ந்தவ... மேலும் பார்க்க

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க கோரிக்கை

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய சங்க முன்னாள் பொதுச் செயலா் அதுல்குமா... மேலும் பார்க்க

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

கும்பகோணம் ஒன்றியம், நீலத்தநல்லூரில் புதன்கிழமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. அட்மா தொழில்நுட்ப கு... மேலும் பார்க்க