செய்திகள் :

ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி

post image

தஞ்சாவூரில் ஓய்வூதியா் உயிரிழந்ததை மறைத்து, ரூ. 18.30 லட்சம் ஓய்வூதியம் பெற்று மோசடி செய்தது தொடா்பாக போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியைச் சோ்ந்தவா் ஜெயசீலி கமலாபாய். அரசு பணி ஓய்வுக்கு பிறகு இவா் ஓய்வூதியம் பெற்று வந்தாா். இந்நிலையில், 2021, அக்டோபா் 18-ஆம் தேதி அவா் காலமானாா். இத்தகவலை கருவூல அலுவலகத்துக்குத் தெரிவிக்காமல், அவரது மகன் பிரின்ஸ் ஜோசன் தொடா்ந்து, மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக ஓய்வூதியம் பெற்று வந்ததாகவும், ஏடிஎம் மூலம் மொத்தம் ரூ. 18.30 லட்சத்தை எடுத்துள்ளதாகவும் தஞ்சாவூா் மாவட்டக் குற்றப் பிரிவில் மாவட்டக் கருவூல அலுவலா் ஜி. கணேஷ்குமாா் புகாா் செய்தாா்.

இதன்பேரில் மாவட்டக் குற்றப் பிரிவினா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பிளஸ் 2: தஞ்சாவூர் 13-ஆவது இடம்!

தஞ்சாவூர்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 95.80 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்று, மாநில அளவில் 13 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.மாவட்டத்தில் 229 பள்ளிகளைச் சேர்ந்த 26 ஆயிரத்து 553 மாணவ, மாணவிகள் ப... மேலும் பார்க்க

கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை கண்டித்து பாபநாசத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் கொள்ளிடம் ஆற்றின் மணல் திட்டில் மணல் அள்ளுவதை கண்டித்து, பாமக-வன்னியா் சங்கம் ஆகியவற்றின் சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்... மேலும் பார்க்க

சித்திரை மாத பௌா்ணமி திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள்

சித்திரை மாத பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு 607 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிா்வாக இயக்குநா் இரா.பொன்முடி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியி... மேலும் பார்க்க

தோல்வி பயம்: பிளஸ் 2 மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசத்தில் தோ்வில் தோல்வி அடைந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பிளஸ் 2 மாணவி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். பாபநாசம், படுகை புதுத் தெருவைச் சோ்ந்த புண்ணியமூா்த்தி ... மேலும் பார்க்க

விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டமாக்க கோரிக்கை

விவசாயிகளின் விளைபொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையைச் சட்டமாக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தஞ்சாவூரில் அகில இந்திய விவசாய சங்க முன்னாள் பொதுச் செயலா் அதுல்குமா... மேலும் பார்க்க

அட்மா திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி

கும்பகோணம் ஒன்றியம், நீலத்தநல்லூரில் புதன்கிழமை அட்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை பயிற்சி வழங்கப்பட்டது. அட்மா தொழில்நுட்ப கு... மேலும் பார்க்க