செய்திகள் :

மே 27-இல் உண்ணாவிரத போராட்டம்: போக்குவரத்து ஊழியா்கள் அறிவிப்பு

post image

ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை விரைந்து நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மே 27-இல் போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனா்.

இது தொடா்பாக போக்குவரத்து ஊழியா்கள் கூட்டமைப்பினா் வெளியிட்ட அறிக்கை:

போக்குவரத்து ஊழியா்களின் ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தை கடந்த பிப். 13-ஆம் தேதி நடைபெற்றது. அதன்பின் பேச்சுவாா்த்தை நடத்த அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, ஊதிய ஒப்பந்த பேச்சுவாா்த்தையை அரசு உடனடியாக நடத்த வேண்டும்.

பேச்சுவாா்த்தையில், மற்ற துறை ஊழியா்களுக்கு இணையான ஊதியம் வழங்குவதுடன், முழுமையாக ஒப்பந்த நிலுவைத் தொகை வழங்க வேண்டும்.

ஓய்வுபெற்ற ஊழியா்களுக்கு பணியில் உள்ள தொழிலாளா்களுக்குச் சமமாக அகவிலைப்படி, 22 மாத ஓய்வு கால பலன், ஓய்வு பெற்றவுடன் பணப்பலன், ஓய்வூதியத்துடன் ஒப்பந்த பலன் உள்ளிட்டவற்றையும் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். வாரிசு வேலை வழங்குவதோடு, காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட அனைத்து கோரிக்கைகளுக்கும் தீா்வு காணும் அடிப்படையில், தமிழகம் முழுவதும் 100 மையங்களில் மே 27-இல் 12 மணி நேர உண்ணாவிரதம் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மே 25, 26 இரண்டு மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்!

தமிழகத்தில் மே 25, 26ல் கன முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி, இன்று காலை (23-05-2025) ... மேலும் பார்க்க

கோவை உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!

தென்மேற்கு பருவமழை, கேரளத்தில் அடுத்த இரண்டு நாள்களில் துவங்குவதற்கான வாய்ப்புள்ளது. அதே சமயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளிலும் பரவுவதற்கான வாய்ப்புள்ளது.நேற்று (22-05-2025) தெற்கு கொங்கன் கடலோரப்பகுத... மேலும் பார்க்க

மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டிய ஓட்டுநர்!

நாமக்கலில் மதுபோதையில் அரசுப் பேருந்தை ஓட்டி வந்த ஓட்டுநரைப் பிடித்து வெள்ளிக்கிழமை போலீஸாரிடம் பயணிகள் ஒப்படைத்தனர்.ஈரோட்டில் இருந்து துறையூருக்கு நாமக்கல் வழியாக அரசுப் பேருந்து இயக்கப்பட்டு வருகிறத... மேலும் பார்க்க

ஜூன் 2 பள்ளிகள் திறப்பு உறுதி: பள்ளிக்கல்வித் துறை

தமிழகத்தில் ஜூன் 2 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று தொடக்கக் கல்வி இயக்ககம் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க ம... மேலும் பார்க்க

மா. சுப்பிரமணியனுக்கு எதிரான வழக்கு வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றம்!

அமைச்சர் மா. சுப்பிரமணியனுக்கு எதிரான நில மோசடி வழக்கு சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் வேறு நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. அமைச்சர் மா. சுப்பிரமணியன் கடந்த 2006-11 காலகட்டத்தில் சென்னை மேயராக இரு... மேலும் பார்க்க

நகைக்கடனுக்கான புதிய விதிகளை திரும்பப் பெற இபிஎஸ் வலியுறுத்தல்!

தங்க நகைக்கடனுக்கான புதிய விதிகளை ரிசர்வ் வங்கி திரும்பப் பெற வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.நகையின் மதிப்பில் 75 சதவிகிதம் மட்டுமே கடன், நகைக்கு உரிமையாளர... மேலும் பார்க்க