செய்திகள் :

மே 29-ல் ஜம்மு - காஷ்மீர் செல்கிறார் அமித் ஷா!

post image

மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இரு நாள்கள் அரசுமுறைப் பயணமாக ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மே 29ஆம் தேதி ஜம்மு - காஷ்மீருக்குச் செல்லும் அவர், இரு நாள்கள் ஜம்மு பிரிவில் உள்ளப் பகுதிகளைப் பார்வையிடவுள்ளார்.

இதோடுமட்டுமின்றி, சமீபத்தில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பூஞ்ச் எல்லைப் பகுதியையொட்டியுள்ள குடும்பங்களைச் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்தப் பிறகு முதல்முறையாக ஜம்மு - காஷ்மீருக்கு அமித் ஷா செல்லவுள்ளார்.

பஹல்காம் தாக்குதலின்போது அனந்த்நாக் மாவட்டத்துக்குச் சென்ற அமித் ஷா, தாக்குதல் நடைபெற்ற பைசாரன் பள்ளத்தாக்கில் நேரில் சென்று பார்வையிட்டார்.

ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்திலுள்ள பஹல்காம் சுற்றுலாப் பகுதியியின் பைசாரன் பள்ளத்தாக்கில் 26 சுற்றுலாப் பயணிகளை பயங்கரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாத இயக்கங்களுக்கு இந்தியா பதிலடி கொடுத்தது.

ஆபரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானின் 3 பயங்கரவாத இயங்கங்களைச் சேர்ந்த 9 முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரிலுள்ள லாஹோர், பெஷாவல்பூர், முஷாஃபர்பாத் ஆகிய பகுதிகளில் உள்ள பயங்கரவாத முகாம்கள் ஆபரேஷன் சிந்தூரில் இலக்கு வைத்து தாக்கப்பட்டன.

இதையும் படிக்க | ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானிடம் இந்தியா சொன்னது எப்போது? முரண்பட்ட தகவல்கள்!

விரைவில் இந்தியாவுடன் பாக். ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும்: ராஜ்நாத் சிங்

இந்தியாவுடன் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீண்டும் இணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். தில்லியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பே... மேலும் பார்க்க

என்கவுன்டரில் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலின் ஷூட்டர் கொலை!

உத்தரப் பிரதேசத்தில் காலிஸ்தான் பயங்கரவாதி லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்த ஷூட்டரை காவல்துறையினர் வியாழக்கிழமை என்கவுன்டர் செய்துள்ளனர்.உத்தரப் பிரதேச சிறப்பு காவல் படை மற்றும் தில்லி போலீஸ் இணைந்த... மேலும் பார்க்க

கர்நாடகத்தைக் கலங்கடிக்கும் கரோனா: ஒருவர் பலி!

பெங்களூர்: கர்நாடக மாநிலத்தில் கரோனா பாதித்து சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 135 ஆக அதிகரித்துள்ளது. 70 வயது முதியவர் கரோனா பாதித்து பலியானது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் பார்க்க

பாகிஸ்தானுக்கு உளவுபார்த்ததாக ராஜஸ்தான் அரசு ஊழியர் கைது

ஜெய்ப்பூர்: பாகிஸ்தானுக்கு ரகசிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார் என்ற சந்தேகத்தின்பேரில், ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.ஷாகுர் கான் என்பவரை, புலனாய்வுத் துறையினர் புதன்கிழமை ... மேலும் பார்க்க

மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து! ஏன்?

பிரதமர் நரேந்திர மோடியின் சிக்கிம் பயணம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதனைத் தொடர்ந்து, மேற்கு வங்கத்தின் பாக்டோக்ராவில் இருந்து காணொலி காட்சி மூலம் சிக்கிம் நிகழ்ச்சியில்... மேலும் பார்க்க

கேரளத்தில் விபத்துக்குள்ளான லைபீரிய சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகளை அப்புறப்படுத்த தன்னாா்வலா்கள்

கேரள கடலோரத்தில் கடந்த வாரம் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த சரக்குக் கப்பலின் பிளாஸ்டிக் கழிவுகள் கரை ஒதுங்கினால் அவற்றை அப்புறப்படுத்தி, தூய்மைப்படுத்த மாநிலம் முழுவதும் தன்னாா்வலா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்... மேலும் பார்க்க