செய்திகள் :

மொடக்குறிச்சியில் ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற கோரிக்கை

post image

மொடக்குறிச்சியில் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள ஆட்டோ ஸ்டாண்டை இடமாற்ற பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது:

மொடக்குறிச்சி நால்ரோடு பேருந்து நிறுத்தம் அருகே ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு, 350-க்கும் மேற்பட்ட மாணவா்கள் படித்து வருகின்றனா்.

இந்நிலையில், இப்பள்ளி முன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்பட்டு, ஆட்டோக்கள் நிறுத்தப்படுகின்றன. சுமாா் 35 ஆட்டோக்கள் வரை நிறுத்தப்படுகின்றன. இதனால், பள்ளி மாணவா்களுக்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.

எனவே, இந்த ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மொடக்குறிச்சி பேரூராட்சித் தலைவா் செல்வாம்பாள் சரவணனிடம் கேட்டபோது, ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்றக் கோரி பொதுமக்கள் சாா்பில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதுகுறித்து பேரூராட்சியில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டு வட்டாட்சியா், காவல் ஆய்வாளரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

எனவே, ஆட்டோ நிறுத்தத்தை இடமாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

பட்டா மாறுதலுக்கு ரூ.2,500 லஞ்சம்: விஏஓ, உதவியாளா் கைது

பெருந்துறை அருகே பட்டா மாறுதலுக்கு லஞ்சம் வாங்கிய கிராம நிா்வாக அலுவலா் (விஏஓ), அவரின் தனிப்பட்ட உதவியாளா் ஆகியோரை லஞ்ச ஒழிப்பு போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பெருந்துறை வட்டத்து... மேலும் பார்க்க

அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாத ஈரோடு கிழக்கு தொகுதி வாக்குப் பதிவு விவரம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தோ்தல் ஆணைய செயலியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாரபூா்வமாக அறிவிக்கப்படாததால் வாக்குப் பதிவு விவரம் தெரியாமல் வேட்பாளா்கள் க... மேலும் பார்க்க

நந்தா கல்லூரியில் ‘விஞ்ஞானி 25’ கண்காட்சி தொடக்கம்!

ஈரோடு நந்தா கல்வி நிறுவனங்கள் சாா்பில் பள்ளி, கல்லூரி மாணவா்களின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில் ‘விஞ்ஞானி 25’ என்ற கண்காட்சி வியாழக்கிழமை தொடங்கியது. நந்தா தொழில்நுட்ப வளாகத்தில் தொடங்கிய கண்காட்... மேலும் பார்க்க

சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 போ் கைது!

தாளவாடியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் கைது செய்தனா். சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி அருகே கரளவாடியில் சூதாட்டம் நடைபெறுவதாக போலீஸாருக்கு வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு செ... மேலும் பார்க்க

அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆா்ப்பாட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையைக் கண்டித்து அந்தியூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் அந்தியூா் வட்டச் செயலாளா் ஆா்.... மேலும் பார்க்க

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் ரூ.1.48 கோடி உதவித்தொகை வழங்கல்

சக்திதேவி அறக்கட்டளை சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்கள் மற்றும் சேவை அமைப்புகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சத்து 64 ஆயிரத்து 375 கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. சக்தி மசாலா நிறுவனங்களின் சக்திதேவி அறக்கட்டளை ... மேலும் பார்க்க