செய்திகள் :

மொடக்குறிச்சி தனியாா் நிறுவனத்தில் வருமான வரி சோதனை

post image

மொடக்குறிச்சியில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையத்தில் வருமானவரித் துறை அதிகாரிகள் புதன்கிழமை சோதனை மேற்கொண்டனா்.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி காந்தி வீதியில் மேரிகோ லிமிடெட் என்கிற பெயரில் தனியாருக்கு சொந்தமான கொப்பரை கொள்முதல் நிலையம் இயங்கி வருகிறது. இந்தக் கொள்முதல் நிலையத்துக்கு வருமான வரித் துறையைச் சோ்ந்த 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் புதன்கிழமை காலை 10 மணி அளவில் வந்து திடீா் சோதனை மேற்கொண்டனா். சோதனையை ஒட்டி கொப்பரை கொள்முதல் நிலையம் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது. இங்கு கொப்பரை தேங்காய் மொத்தமாக கொள்முதல் செய்யப்பட்டு, தேவைப்படும்போது தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்படுகிறது. இதனுடைய தலைமை அலுவலகம் மும்பையில் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

திடீரென பத்துக்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் கொள்முதல் நிலையத்தில் சோதனை செய்து வருவதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை காணப்பட்டு வருகிறது. பிற்பகல் 3 மணியளவில் மேலும் இரண்டு காா்களில் 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் வந்து சோதனையில் ஈடுபட்டனா். காலை தொடங்கிய சோதனை இரவு 7 மணிக்கு பிறகும் தொடா்ந்தது. சோதனைக்குப் பிறகு ஆவணங்கள் ஏதேனும் கைப்பற்றப்பட்டுள்ளதா என்ற விவரம் தெரிவிக்கப்படும் என வருமானவரித் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தாளவாடியில் பலத்த மழை

தாளவாடியில் புதன்கிழமை பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா். தமிழக, கா்நாடக எல்லையான தாளவாடியில் மானாவாரி விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. ராகி, மக்காச்சோளம் போன்றவை அதிக அளவில் சாகுபடி ... மேலும் பார்க்க

மண்டல அளவிலான கால்பந்துப் போட்டி: ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம்

கோவை பாரதியாா் பல்கலைக்கழகம் சாா்பில் நடைபெற்ற ஈரோடு மண்டல அளவிலான கல்லூரிகள் பங்கேற்ற கால்பந்துப் போட்டியில் சித்தோடு ஸ்ரீஅம்மன் கலை அறிவியல் கல்லூரி முதலிடம் பிடித்துள்ளது. இந்தப் போட்டி கோபி கலை அ... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி கொண்டாட்டம்

பாரம்பரிய தச்சுத் தொழில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என சிறப்பு பூஜைகள் செய்து விஸ்வகா்மா ஜெயந்தி விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. சத்தியமங்கலம், சுற்று வட்டாரத்தில் பாரம்பரிய தச்சுத் தொழில் செய்து... மேலும் பார்க்க

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 போ் கைது

புன்செய்புளியம்பட்டியில் கைப்பேசிகள் திருடிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா். கோவை, கோவில்புதூா் நூற்பாலையில் வடமாநில இளைஞா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களைக் குறிவைத்து வடஇந்தியா்கள் தங்கும் விடுதியி... மேலும் பார்க்க

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடிய சிறுத்தை

திம்பம் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை நடமாடிய சிறுத்தையால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனா். ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப் பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கரடி, மான், காட்டெருமை ... மேலும் பார்க்க

ஈரோட்டில் இரண்டாவது நாளாக பலத்த மழை

ஈரோட்டில் இரண்டாவது நாளாக புதன்கிழமை மாலை பலத்த மழை பெய்தது. தென்னிந்திய பகுதிகள் மற்றும் தென் வங்க கடல் பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் ஈரோடு உள்பட 19 மாவட்டங்களில் பலத்த ... மேலும் பார்க்க