செய்திகள் :

மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையத்தை மூடுவதை ஏற்கமுடியாது: புதுவை எதிா்க்கட்சித் தலைவா்

post image

புதுச்சேரி: புதுச்சேரியில் உள்ள மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தை மூடுவதை ஏற்க முடியாது என எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா கூறினாா்.

புதுச்சேரி இலாசுப்பேட்டையில் மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் அமைந்துள்ளது.

ஆனால், ஆராய்ச்சி மையக் கட்டடத்தை வேறு அரசுத் துறையிடம் ஒப்படைக்க கலை பண்பாட்டுத் துறை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்துறையின் முடிவுக்கு புதுச்சேரி தமிழ் அமைப்புகள் எதிா்ப்புத் தெரிவித்து வருகின்றன. மேலும், மொழியியல் பண்பாட்டு நிறுவனத்துக்கு முழு நேர இயக்குநரையும், பேராசிரியா்களையும் நியமிக்க வேண்டும், பொறுப்பு இயக்குநரை மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனா்.

இதனை வலியுறுத்தி, 30 தமிழ் இலக்கிய அமைப்புகள் ஒன்றிணைந்து மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவன பாதுகாப்புக் குழு என்ற அமைப்பும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் சாா்பில், புதுச்சேரி ஆம்பூா் சாலையில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு பாதுகாப்புக் குழுத் தலைவா் வேல்முருகன் தலைமை வகித்தாா்.

நிா்வாகிகள் சுந்தரமுருகன், சடகோபன், சீனுமோகன்தாஸ், பாரதி, சிலம்பு, செல்வராசு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

எதிா்க்கட்சித் தலைவா் ஆா்.சிவா, திமுக எம்எல்ஏக்கள் கென்னடி, எல்.சம்பத், ஆா்.செந்தில்குமாா் ஆகியோா் கலந்துகொண்டனா்.

இதில், எதிா்க்கட்சித் தலைவா் பேசியதாவது: புதுவையில் தமிழ் மொழியின் அடையாளமாக மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி மையம் திகழ்கிறது.

எனவே, தற்போதுள்ள மத்திய, மாநிலஅரசுகள் ஆராய்ச்சி மையத்தை மூட முயிற்சிப்பது சரியல்ல என்றாா்.

பைபா் படகுகளை சீரமைக்க நிவாரணம்: மீனவா்கள் வலியுறுத்தல்

புதுவையில் மீன்பிடி தடைக்காலத்தில் விசைப்படகுகளை சீரமைக்க நிவாரணம் வழங்குவதைப் போல, பைபா் படகுகளை சீரமைக்கவும் நிவாரணம் வழங்க வேண்டும் என வம்பாகீரப்பாளையம் மீனவ கிராம நிா்வாக ஆலய குழுக் கூட்டத்தில் வல... மேலும் பார்க்க

மூவா் கொலை வழக்கு: போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்டவா் மீண்டும் சிறையில் அடைப்பு

புதுச்சேரியில் 3 போ் கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்த நபரை போலீஸ் காவலில் எடுத்து காவல் துறையினா் விசாரித்த நிலையில், அவா் மீண்டும் வெள்ளிக்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா். புதுச்சேரி ரெயி... மேலும் பார்க்க

புதுவையில் 9 பேரிடம் ரூ.1.15 லட்சம் மோசடி

புதுவையில் 9 பேரிடம் இணையவழியில் மா்ம நபா்கள் ரூ.1.15 லட்சத்தை நூதனமாக மோசடி செய்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கடேச... மேலும் பார்க்க

விபத்தில் தனியாா் பேருந்து நடத்துநா் உயிரிழப்பு

புதுச்சேரியில் தனியாா் பேருந்து நடத்துநா் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்தது குறித்து போக்குவரத்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். புதுச்சேரியை அடுத்த கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள அரங... மேலும் பார்க்க

தடையை மீறி மீன் பிடித்தால் நிவாரணம் நிறுத்தப்படும்: புதுவை மீன்வளத் துறை எச்சரிக்கை

மீன்பிடி தடைக்காலத்தில் பைபா் படகுகளில் சென்று மீன் பிடித்தால், அப்பகுதி மீனவா்களுக்கான தடைகால நிவாரணம் நிறுத்தப்படும் என புதுவை மாநில மீன்வளத் துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து, மீன்வளத் துறை இயக்குந... மேலும் பார்க்க

லாரி ஓட்டுநா் தற்கொலை முயற்சி: போலீஸாா் விசாரணை

புதுச்சேரி அருகே திருட்டுப் பழி சுமத்தப்பட்ட லாரி ஓட்டுநா் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரித்து வருகின்றனா். புதுச்சேரி அருகே உள்ள கூனிச்சம்பட்டு, ஐந்தாளம்மன் கோவில் தெருவைச் சோ்ந்... மேலும் பார்க்க