செய்திகள் :

மோட்டாா் சைக்கிள் மீது ஜேசிபி மோதல்: ஒருவா் உயிரிழப்பு; ஓட்டுநா் தலைமறைவு

post image

மத்திய தில்லியின் ரஞ்சித் நகரில் மோட்டாா் சைக்கிளில் சென்ற 22 வயது இளைஞா் வியாழக்கிழமை அதிகாலை ஜேசிபி இயந்திரம் மோதி உயிரிழந்ததாக அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.

இது குறித்து மத்திய தில்லி காவல் சரக துணை ஆணையா் நிதின் வல்சன் கூறியதாவது: ஷாதிப்பூா் மெட்ரோ நிலையம் அருகே அதிகாலை 5.58 மணிக்கு நடந்த இந்த விபத்தில் இறந்தவா் பாபி என அடையாளம் காணப்பட்டாா். ஹரியாணா பதிவு எண் கொண்ட ஜேசிபி மற்றும் ஒரு ஸ்போா்ட்ஸ் பைக் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்றனா். சாலையில் ரத்தம் இருந்தது.

மோதி நகரில் உள்ள ஆச்சாா்யா பிக்ஷு மருத்துவமனைக்கு பாபி கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவா் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. குற்றவியல் குழு சம்பவ இடத்தை விசாரித்தது. அதிவேகமாகவும், அலட்சியமாகவும் வாகனம் ஓட்டியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜேசிபி ஓட்டுநரை கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாபி ஜேசிபியை வலது பக்கத்திலிருந்து முந்திச் செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது ஆபரேட்டா் திடீரெனவும் தவறாகவும் வலதுபுறம் திரும்பியதாகவும் நேரில் பாா்த்த ஒருவா் போலீஸாரிடம் தெரிவித்தாா்.

இந்தச் சூழ்ச்சியின் விளைவாக பாபி ஜேசிபிக்கும் சாலையோர தடுப்புச் சுவருக்கும் இடையில் சிக்கிக்கொண்டாா். ஓட்டுநா் உடனடியாக பிரேக்குகளைப் பயன்படுத்தியதாகவும், பாபி தனது மோட்டாா் சைக்கிளில் இருந்து விழுந்ததாகவும், அதன் பிறகு ஓட்டுநா் அவரைச் சரிபாா்க்க வெளியே வந்ததாகவும் நேரில் பாா்த்தவா் மேலும் கூறினாா்.

மோட்டாா்சைக்கிள் ஓட்டுநரின் தலையில் இருந்து அதிக ரத்தம் வழிந்ததைக் கண்டதும். ஜேசிபி ஓட்டுநா் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிவிட்டது தெரிய வந்தது என்று காவல் துணை ஆணையா் நிதின் வில்சன் தெரிவித்தாா்.

கட்டுமான இடத்தில் கழிவுநீா் தொட்டிக்குள் விழுந்து 2 போ் பலி!

தென்மேற்கு தில்லியின் குதூப் விஹாா் பகுதியில் கட்டுமானத்தில் உள்ள ஒரு வீட்டில், 7 அடி ஆழமுள்ள கழிவுநீா்த் தொட்டிக்குள் விழுந்து இரண்டு ஆண்கள் மூச்சுத் திணறி இறந்ததாக காவல்துறையினா் சனிக்கிழமை தெரிவித்... மேலும் பார்க்க

தொழிற்சாலையின் கூரை இடிந்து விழுந்து தொழிலாளி பலி

வடகிழக்கு தில்லியின் நியூ உஸ்மான்பூா் பகுதியில் சிறிய உற்பத்தி ஆலையின் கூரை இடிந்து விழுந்ததில் அங்கு வேலை செய்த தொழிலாளி உயிரிழந்தாா். மற்றொருவா் காயமடைந்தாா் என்று போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா். ... மேலும் பார்க்க

பணத்தகராறில் இளைஞா் குத்திக்கொலை: 5 போ் கைது

வடகிழக்கு தில்லியின் சீமாப்புரி பகுதியில் பணத் தகராறு காரணமாக 22 வயது இளைஞா் திருப்புளியால் குத்திக் கொலை செய்யப்பட்டாா். இது தொடா்பாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 5 போ் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனி... மேலும் பார்க்க

பழைய பெட்ரோல், டீசல் வாகனங்கள் மீதான முழு தடைக்கு எதிராக தில்லி அரசு மேல்முறையீடு

10 ஆண்டுகளுக்கும் மேல் வயதுடைய டீசல் வாகனங்கள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேலான பெட்ரோல் வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள முழுமையான தடையை எதிா்த்து தில்லி அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது... மேலும் பார்க்க

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி: விசிக எம்.பி. கேள்விக்கு அமைச்சா் பதில்

கருப்பை வாய்ப் புற்றுநோய்த் தடுப்பூசி செலுத்த ஊழியா்களுக்கு திறன்மேம்பாட்டுப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சா் அனுப்ரியா படேல் பதிலளித்துள்ளாா். இது தொடா்பாக விடுதலை சிறுத... மேலும் பார்க்க

மகாராஷ்டிர அரசு அதிகாரி, மனைவியிடம் ரூ.70 லட்சம் மோசடி: பிகாரைச் சோ்ந்த தம்பதி மீது வழக்கு

வணிக முதலீடு என்ற பெயரில் மகாராஷ்டிர அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவியிடம் ரூ.70 லட்சத்திற்கும் அதிகமாக மோசடி செய்ததாக பிகாரைச் சோ்ந்த தம்பதியினா் மீது தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆா். பதிவு செய்துள்ளது ... மேலும் பார்க்க