செய்திகள் :

ம.பி.: இளைஞரைக் கொன்று உடலில் பாதியை தின்ற புலி

post image

மத்தியப் பிரதேசத்தில் பீடி இலைகளை சேகரிக்க சென்ற இளைஞரை கொன்று உடலில் பாதியை தின்ற புலியால் பரபரப்பு நிலவியது.

மத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்டாங்கி வனப்பகுதியில் பீடி இலைகளைச் சேகரிக்க அனில் அகன்சிங் (33) வெள்ளிக்கிழமை சென்றுள்ளார். உடன் பெண் கஸ்தூராபாய் பெண்ணும் சென்றிருக்கிறார்.

அப்போது அங்கிருந்த புலி ஒன்று அனில் அகன்சிங்கை தாக்கிக் கொன்றதோடு உடலின் குறிப்பிடத்தக்க பகுதியையும் தின்றுள்ளது.

இதுகுறித்து தலைமை வனப்பாதுகாவலர் கௌரவ் சௌத்ரி கூறுகையில், அவரது உடலில் பாதியை புலி தின்றுவிட்டது. உள்ளூர் ஊழியர்கள் அந்தப் பகுதியில் ரோந்து செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கேதார்நாத்தில் எய்ம்ஸ் ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்

மேலும் குடியிருப்பாளர்கள் இரவில் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

உடற்கூராய்வு அறிக்கையைப் பெற்ற பிறகு, அவரது உறவினர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். அகன்சிங்குடன் சென்ற பெண் கஸ்தூராபாய் கூறுகையில், புலி திடீரென தாக்கியது.

மெல்லிய சப்தம் கேட்டு பார்த்தபோது அகன்சிங்கின் உடலைக் கண்டதாகவும், அதைத்தொடர்ந்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்தாகவும் தெரிவித்தார்.

6ஜி தொழில்நுட்பம்: உலகின் முன்னோடியாக இந்தியா திகழும் -ஜோதிராதித்ய சிந்தியா

வரும் நாள்களில் 6ஜி தொழில்நுட்பத்துக்கான விதிகளை வகுப்பதில் உலக நாடுகளுக்கு முன்னோடியாக இந்தியா திகழும் என மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் ஜோதிராதித்ய சிந்தியா சனிக்கிழமை தெரிவித்தாா். உலக தொலைத்... மேலும் பார்க்க

ஏற்றுமதியில் முன்னணி வகித்த வேளாண் பொருள்கள்

இந்தியாவின் 2024-25-ஆம் நிதியாண்டு பொருள் ஏற்றுமதியில் வேளாண்மை, மருந்து, மின்னணுவியல் மற்றும் பொறியியல் பொருட்கள் 50 சதவீதத்திற்கு மேல் பங்களித்துள்ளன.இது குறித்து என்று மத்திய அரசின் தரவுகள் தெரிவிப... மேலும் பார்க்க

பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வி!

3-வது அடுக்கு பிரிவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பிஎஸ்எல்வி சி-61 திட்டம் தோல்வியடைந்ததாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி சி-61!

புவிக் கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவிவிருந்து இன்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சாா்பில் புவிக் கண்காணிப்பு மற்றும் தொலையுணா்வு பயன்பாட... மேலும் பார்க்க

வங்கதேசத்தில் இருந்து இறக்குமதிக்கு இந்தியா கட்டுப்பாடு!

வங்கதேசத்தில் இருந்து இந்தியாவில் ஆயத்த ஆடைகள், பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை நில சுங்கச்சாவடிகள் வாயிலாக இறக்குமதி செய்ய மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய... மேலும் பார்க்க

பத்திரிகை சுதந்திர குறியீடு: 151-ஆவது இடத்தில் இந்தியா

உலக பத்திரிகை சுதந்திர குறியீடு தரவரிசையில் இந்தியா 151-ஆவது இடத்தை பிடித்துள்ளது. 180 நாடுகளில் ‘ரிப்போா்ட்டா்ஸ் வித்அவுட் பாா்டா்ஸ்’ நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட இந்த கணக்கெடுப்பில் 151-ஆவது இடத்தை ... மேலும் பார்க்க