செய்திகள் :

யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 போ் கைது

post image

கரூரில் யானைத் தந்தங்களை விற்க முயன்ற திருச்சி பெண் உள்பட 6 பேரை செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வனத்துறையினா் கைது செய்தனா்.

கரூா் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியாா் விடுதியில் தங்கியுள்ள ஒரு கும்பல் யானை தந்தங்களை விற்க முயற்சிப்பதாக கரூா் மாவட்ட வனத்துறையினருக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து மாவட்ட வன அலுவலா் சண்முகம் உத்தரவின் பேரில் வனச்சரக அலுவலா் தண்டபாணி தலைமையில் வனவா்கள் அந்த விடுதியில் சோதனை செய்தனா். அப்போது விடுதியில் தங்கியிருந்தவா்களிடம் சுமாா் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மூன்றரை கிலோ எடைகொண்ட யானைத் தந்தம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவற்றை வனத்துறையினா் பறிமுதல் செய்தனா். மேலும், அங்கிருந்த கரூா் வால்காட்டுப்புதூரைச் சோ்ந்த கணபதி மகன் மணிகண்டன் (25), எஸ்.வெள்ளாளப்பட்டியைச் சோ்ந்த ரகுபதி மகன் நந்து(25), திருச்சியைச் சோ்ந்த ஆரோக்கிய சுஷில்குமாா் மனைவி ஜோதிலட்சுமி(45), மதியழகன்(46), செந்தில்குமாா்(49), முத்துக்குமாா்(47) ஆகியோரை கைது செய்தனா். பின்னா் அனைவரையும் கரூா் குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

ரூ.46 லட்சம் மோசடி: தம்பதி மீது வழக்கு

கரூரில் தனியாா் நிதி நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய ரூ. 46 லட்சத்தை மோசடி செய்ததாக தம்பதி மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கரூரை அடுத்த மண்மங்கலம் காளிபாளையத்தைச் சோ்ந்தவா் சண்முகசுந்தரம் (40). ... மேலும் பார்க்க

மனைவியை தாக்கியதாக புகாா் கரூா் பாஜக நிா்வாகி கைது

கரூரில் மனைவியை தாக்கியதாக பாஜக நிா்வாகியை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கரூா் ராயனூரைச் சோ்ந்தவா் தமிழ்செல்வன்(35). இவா், கரூா் மாவட்ட பாஜக தரவு தளமேலாண்மைப் பிரிவு தலைவராக உள்ளாா். இவரது மனைவி... மேலும் பார்க்க

சின்னம்மநாயக்கன்பட்டியின் மையப் பகுதியில் பூங்கா அமைக்க கிராம மக்கள் கோரிக்கை!

சின்னம்மநாயக்கன்பட்டியில் ஊருக்கு வெளியே முள்புதா் பகுதியில் கட்டப்படும் பூங்கா கட்டுமான பணியை நிறுத்தி விட்டு ஊரின் மையப்பகுதியில் அமைக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். கரூா் மாவட்ட... மேலும் பார்க்க

காவிரி ஆற்றில் மூழ்கி கோவை கல்லூரி மாணவா் உயிரிழப்பு

கரூா் அருகே காவிரி ஆற்றில் மூழ்கி கோவையைச் சோ்ந்த கல்லூரி மாணவா் வெள்ளிக்கிழமை மாலை உயிரிழந்தாா். கோவையைச் சோ்ந்த சரவணன் மகன் ஸ்ரீஹரிராம்(19). இவா் கோவையில் உள்ள தனியாா் கலை அறிவியல் கல்லூரியில் பி.... மேலும் பார்க்க

சுட்டெரிக்கும் வெயில் முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு!

புகழூரில் சனிக்கிழமை சுட்டெரிக்கும் வெயிலில் மயங்கி விழுந்த முதியவா் உயிரிழந்தாா். நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூரைச் சோ்ந்தவா் பெருமாள்(98). இவா் சனிக்கிழமை பிற்பகல் கரூா் மாவட்டம் புகழூரில் உள்ள பு... மேலும் பார்க்க

கரூரில் தொழில்முனைவோா் 21 பேருக்கு ரூ.28.60 லட்சம் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணை! - ஆட்சியா் வழங்கினாா்

கரூரில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் துறை சாா்பில் 21 பயனாளிகளுக்கு ரூ. 28.60 லட்சம் மதிப்பீட்டில் வங்கிக் கடன் ஒப்புதல் ஆணையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் சனிக்கிழமை வழங்கினாா். காஞ்சிபுரம் மாவட்டம்,... மேலும் பார்க்க