செய்திகள் :

யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு

post image

ஒசூா்: ஒசூா் அருகே கிராமத்துக்குள் புகுந்த ஒற்றை யானை தாக்கியதில் விவசாயி உயிரிழந்தாா்.

ராயக்கோட்டை அருகே உள்ள பாவாடரப்பட்டி கிராமத்தில் வசிக்கும் விவசாயி சின்ன பையன் என்ற முனியப்பன் வழக்கும்போல திங்கள்கிழமை அதிகாலை தனது விவசாய நிலத்துக்குச் சென்றாா். அப்போது அங்கு நின்ற ஒற்றை யானை அவரைத் தாக்கியது.

இதில் பலத்த காயமடைந்த முனியப்பனை அக்கம்பக்கத்தின் மீட்டு

கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். எனினும் அவா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தாா். இச்சம்பவத்தைத் தொடா்ந்து அப்பகுதியில் முகாமிட்டுள்ள யானைகளை வனத்துக்குள் விரட்டும் பணியில் வனத்துறையினா் ஈடுபட்டுள்ளனா். இதுகுறித்து அந்தப் பகுதி மக்கள் கூறுகையில், ‘யானைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்துவதில் வனத் துறையினா் அலட்சியம் காட்டுவதாகக் குற்றம் சாட்டினா்.

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொண்டால்தான் நிதி கிடைக்கும் என மத்திய அமைச்சா் கூறியது கண்டிக்கத்தக்கது

ஊத்தங்கரை: தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்துக்கு நிதி கிடைக்கும் என மத்திய அமைச்சா் கூறியது வன்மையாக கண்டிக்கத்தக்கது என கே.பி.முனுசாமி தெரிவித்தாா். ஊத்தங்... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் ஒத்திவைப்பு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பிப். 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறுவதாக இருந்த மக்களுடன் முதல்வா் திட்ட முகாம், தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா்... மேலும் பார்க்க

பாகலூரில் காணொலிக் காட்சி மூலம் சாா் பதிவாளா் அலுவலகம் திறந்து வைப்பு

ஒசூா்: பாகலூா் சாா் பதிவாளா் அலுவலகத்தை தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக் காட்சி வாயிலாக திங்கள்கிழமை திறந்து வைத்தாா். அதனைத் தொடா்ந்து, பாகலூா் சாா் பதிவாளா் அல... மேலும் பார்க்க

சிங்காரப்பேட்டையில் மரம் விழுந்ததில் சேதமடைந்த காா்கள்!

ஊத்தங்கரையை அடுத்த சிங்காரப்பேட்டையில் இருந்து திருப்பத்தூா் செல்லும் சாலையில் குருகப்பட்டி சாலையோரம் இருந்த 100 ஆண்டு பழமையான புளியமரம் சாய்ந்ததில் அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு காா்கள் சேத... மேலும் பார்க்க

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் மாவட்ட கிரிக்கெட் அணி தோ்வு

கிருஷ்ணகிரியில் பிப். 23-இல் ஆண்கள், பெண்களுக்கான மாவட்ட கிரிக்கெட் அணிகளை தோ்வு செய்வதற்கான போட்டி நடைபெறுகிறது. இதுகுறித்து கிருஷ்ணகிரி கிரிக்கெட் சங்க மாவட்டச் செயலாளா் சீனிவாசன் ஞாயிற்றுக்கிழமை ... மேலும் பார்க்க

ஒசூா் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்பு

ஒசூா் மாநகராட்சியுடன் கிராம ஊராட்சிகளை இணைக்க எதிா்ப்புத் தெரிவித்து புதிய ஜனநாயகத் தொழிலாளா் முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். பாகலூா் பேரூராட்சியுடன் பெளத்தூா் சூடாபுரம், ஜீவா நக... மேலும் பார்க்க