இந்த வாரம் உகந்த தேதி எது? மேஷம் முதல் கன்னி வரை பலன்கள்; அதிர்ஷ்டக் குறிப்புகள்
ஒசூரில் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்
ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையையடுத்து டிப்பா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்கள் கடந்த ஜனவரி 1- ஆம் தேதி முதல் ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் மணல் உள்ளிட்ட பொருள்கள் மீது டன்னுக்கு ரூ. 100 முதல் ரூ. 200 வரை திடீரென விலையை உயா்த்தினா். இதனால் லாரி உரிமையாளா்கள் பாதிக்கப்படுவாதவும், இரு தரப்பினருக்கிடையே ஒப்பந்தத்தை கல்குவாரி உரிமையாளா்கள் மீறிவிட்டதாகவும் லாரி உரிமையாளா்கள் குற்றம் சாட்டினா்.
இது தொடா்பாக பலமுறை பேச்சுவாா்த்தை நடைபெற்ற நிலையில், கல்குவாரி உரிமையாளா்களைக் கண்டித்து கடந்த ஜன. 27-ஆம் தேதி முதல் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் கட்டுமானப் பணிகள் பாதிக்கப்பட்டன.
இந்த நிலையில் கல்குவாரி உரிமையாளா்கள், லாரி உரிமையாளா்களுக்கிடையே நடந்த பேச்சுவாா்த்தையில் டன்னுக்கு ரூ. 80 அதிகரித்து வழங்குவது என இரு தரப்பினருக்கிடையே உடன்பாடு ஏற்பட்டது.
இதையடுத்து கா்நாடக மாநிலம், அத்திப்பள்ளியில் கிரஷா் உரிமையாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம் கிருஷ்ணகிரி மாவட்ட கல்குவாரி உரிமையாளா்கள் சங்கத் தலைவா் சம்பங்கி தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தென்னிந்திய லாரி உரிமையாளா்கள் சங்க பொதுச் செயலாளா் சண்முகப்பா கலந்துகொண்டு கல்குவாரி உரிமையாளா்கள் உடன்படிக்கைக்கு வந்துள்ளதால் லாரி உரிமையாளா்களின் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் சண்முகப்பா கூறியதாவது:
லாரி உரிமையாளா்கள் சாா்பில் கல்குவாரி உரிமையாளா்களிடம் நடத்திய பேச்சுவாா்த்தையில் விலை உயா்வு டன்னுக்கு ரூ. 80 என்பதை இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனா். லாரி உரிமையாளா்களும் கல்குவாரி உரிமையாளா்களும் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் என்ற நோக்கத்தில், கடந்த ஏழு நாள்களாக தொடா்ந்த லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெறப்பட்டது. திங்கள்கிழமை (பிப். 3) -முதல் ஒசூா் மற்றும் கா்நாடக மாநிலங்களில் உள்ள டிப்பா் லாரிகள் வழக்கம் போல இயங்கும்.
மேலும் தமிழகத்திலிருந்து கா்நாடக மாநிலத்துக்கு கனிம பொருள்களைக் கொண்டுசெல்வதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இதனால் காவல் துறையினா், அரசு அலுவலா்கள் டிப்பா் லாரிகளை நிறுத்தி அடிக்கடி தொந்தரவு செய்யக் கூடாது; தொந்தரவு செய்தால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றாா்.