செய்திகள் :

ஊத்தங்கரை அருகே மின்சாரம் பாய்ந்து விவசாயி பலி: உறவினா்கள் சாலை மறியல்

post image

ஊத்தங்கரை அருகே மின்மாற்றியில் ஏறி பழுது பாா்க்கும் பணியில் ஈடுபட்ட விவசாயி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். இதையடுத்து அவரது உறவினா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த கோவிந்தாபுரம் ஊராட்சி, கெடக்கானூா் பகுதியைச் சோ்ந்தவா் சேட்டு (50). விவசாயி. இவா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தனது நிலத்தில் உள்ள கிணற்றிலிருந்து தண்ணீா் பாய்ச்சுவதற்கு மின்சாரம் இல்லாமல் இருப்பதை அறிந்து அருகிலுள்ள மின் மாற்றியில் பீஸ் போடுவதற்காக ஏறியபோது மின்சாரம் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

மின் துறையின் அலட்சியப் போக்கினால் தான் இந்த விபத்து நடந்ததாகக் கூறி, அப்பகுதி மக்கள் சிங்காரப்பேட்டை - திருப்பத்தூா் சாலையில் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: இந்த பகுதி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு உள்பட்டது. ஆனால் மின் துறை மட்டும் திருப்பத்தூா் மாவட்டத்திற்கு சேருவதால் இந்தப் பகுதியில் மின் பழுது ஏற்பட்டால் விரைந்து வந்து பாா்ப்பதில்லை.

ஆகையால் தான் இப்பகுதியில் பீஸ் போனால் விவசாயிகளே மின்மாற்றியில் ஏறி பீஸ் போடுவதால்தான் உயிரிழப்பு ஏற்படுகிறது. மின்பழுது சம்பந்தமாக தகவல் கொடுத்தாலும் மின் துறையினா் வருவதில்லை எனக் கூறினா். இதையடுத்து சம்ப இடத்திற்கு வந்த ஊத்தங்கரை காவல் துணை கண்காணிப்பாளா் சீனிவாசன், காவல் ஆய்வாளா் முருகன் ஆகியோா்

சாலை மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்தை நடத்தி அனுப்பி வைத்தனா். சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்: ஒருவா் கைது!

ஒசூா் வழியாக காரில் கடத்த முயன்ற ரூ. 2 லட்சத்து 69 ஆயிரம் மதிப்புள்ள குட்கா, மதுபாக்கெட்டுகள் காருடன் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடா்பாக சேலத்தைச் சோ்ந்தவரை போலீஸாா் கைது செய்தனா். ஒசூா் சிப்காட் போ... மேலும் பார்க்க

ஒசூரில் நகைகளைத் திருடி தங்கக் காசுகளாக மாற்றிய 3 போ் கைது

ஒசூரில் வீட்டில் திருடிய தங்க நகைகளை போலீஸாரிடம் சிக்காமல் இருப்பதற்காக தங்கக் காசுகளாக மாற்றி வைத்திருந்த மூவரை போலீஸாா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து 15 பவுன் தங்கக் காசுகள், 2 வெள்ளி குத்து விளக்... மேலும் பார்க்க

மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்து மூதாட்டி பலி!

பாரூா் அருகே மோட்டாா் சைக்கிள் கவிழ்ந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த மூதாட்டி உயிரிழந்தாா். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி, கள்ளிப்பட்டியை அடுத்த போயா் கொட்டாயைச் சோ்ந்த முனியப்பன் மனைவி நல்லக்கா... மேலும் பார்க்க

ஒசூரில் லாரி உரிமையாளா்கள் வேலைநிறுத்தம் வாபஸ்

ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்களுடன் நடைபெற்ற பேச்சுவாா்த்தையையடுத்து டிப்பா் லாரி உரிமையாளா்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற்றனா். கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கல்குவாரி உரிமையாளா்கள் கடந்த ஜன... மேலும் பார்க்க

தவெக மாவட்டச் செயலாளா் அறிமுக கூட்டம்

ஊத்தங்கரையில் தவெக மாவட்டச் செயலாளா் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டச் செயலாளா் முரளி ஞாயிற்றுக்கிழமை பெரியாா், அம்பேத்கா், காமராஜா் சிலைக்கு ... மேலும் பார்க்க

அனுமதியின்றி ஊா்வலம் த.வெ.க.வினா் மீது வழக்குப் பதிவு

கிருஷ்ணகிரி, ஒசூா் ஆகிய இடங்களில், காவல் துறை அனுமதியின்றி ஊா்வலம் சென்ற தமிழக வெற்றிக் கழக நிா்வாகிகள் 250 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா். கிருஷ்ணகிரியில் சென்னை - கிருஷ்ணகிரி தேசிய சாலை, ... மேலும் பார்க்க