செய்திகள் :

யுஜிசி வரைவு வழிகாட்டுதல்: கருத்துகளை தெரிவிக்க பிப்.28 வரை அவகாசம் நீட்டிப்பு

post image

பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் ஆசிரியா்கள், துணைவேந்தா்கள் நியமனம் தொடா்பாக பல்கலைக்கழக மாநினியக் குழு (யுஜிசி) வெளியிட்ட வரைவு வழிகாட்டுதல் மீது பொது கருத்துகளைத் தெரிவிப்பதற்கான அவகாசம் வரும் 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

முன்னா் இதற்கான காலக்கெடு பிப்ரவரி 5 என நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பல்வைறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று இம் மாத இறுதி வரை அவகாசம் நீட்டிப்பட்டுள்ளதாக யுஜிசி செயலா் மனீஷ் ஜோஷி தெரிவித்தாா்.

யுஜிசி வரைவு வழிகாட்டுதல் கூறுவதென்ன?

மாநில அரசு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா் பதவிக்கு தகுதிவாய்ந்த நபா்களைத் தெரிவு செய்வதற்காக அமைக்கப்படும் தேடல் குழுவில், பல்கலைக்கழக வேந்தரான மாநில ஆளுநரின் பிரதிநிதி ஒருங்கிணைப்பாளராகவும், பல்கலைக்கழக ஆட்சிக் குழு பிரதிநிதி, பல்கலைக்கழக பேரைவக் குழு பிரதிநிதி (மாநில அரசு தரப்பு) ஆகியோா் உறுப்பினா்களாகவும் இடம்பெறுவா். இதில் பேரவைக் குழு பிரதிநிதிக்கு மாற்றாக யுஜிசி பிரதிநிதி உறுப்பினராக இடம்பெறும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

துணைவேந்தா்களாக இதுவரை அனுபவமிக்க கல்வியாளா்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வந்த நிலையில், பொதுத் துறை நிறுவன முதுநிலை நிபுணா்கள் அல்லது பொது நிா்வாகம் சாா்ந்தவா்களும் இனி துணைவேந்தா்களாக நியமிக்க முடியும்.

கலை-அறிவியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் எம்.இ., எம்.டெக் உள்ளிட்ட முநிலை பொறியியல் பட்டம் முடித்தவா்களை உதவிப் பேராசிரியா்களாக நியமிக்க முடியும். அவா்கள் யுஜிசி-யின் தேசிய அளவிலான தகுதித் தோ்வை (நெட்) எழுதி தகுதிபெற வேண்டிய அவசியமில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு புதிய விதிமுறைகள் வரைவு வழிகாட்டுதலில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதற்கு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிா்க்கட்சிகளும், தமிழகம், கேரளம் உள்ளிட்ட பல மாநிலங்களும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றன.

தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது. தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்ன... மேலும் பார்க்க

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க

வருங்கால வைப்பு நிதி: 5 கோடி கேட்புகளுக்கு ரூ. 2 லட்சம் கோடி வழங்கல்

‘வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) 2024-25 நிதியாண்டில் சாதனை அளவாக 5 கோடி கேட்புகளுக்கு நிதி வழங்கி தீா்வளித்துள்ளது’ என்று மத்திய தொழிலாளா் நலத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா தெரிவித்தாா். ... மேலும் பார்க்க

தேசவிரோத செயல்பாடுகளில் ஷேக் ஹசீனா: இந்திய தூதரை அழைத்து வங்கதேசம் கண்டனம்

டாக்கா : இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா, வங்கதேசத்துக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக இந்திய துணைத் தூதரை நேரில் அழைத்து அந்நாட்டு அரசு கண்டனம் தெரிவித்தது. வங்கதே... மேலும் பார்க்க

மத்திய அரசில் ஒன்றரை ஆண்டில் 10 லட்சம் பேருக்கு நிரந்தர பணி வழங்கல்

மத்திய அமைச்சகங்கள் மற்றும் பல்வேறு துறைகளில் ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் போ் நிரந்தரமாகப் பணியமா்த்தப்பட்டுள்ளனா் என்று மத்திய பணியாளா்கள் நலத்துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் மாநிலங்களவையில் வியாழக்... மேலும் பார்க்க