மாா்க்சிஸ்ட் - பாஜக மோதல்: இந்து முன்னணி நிர்வாகி மண்டை உடைப்பு! 16 போ் கைது!
யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது: ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம்!
யோகா நாள் சமூகத் திருவிழாவாக மாறியிருக்கிறது என்று குறிப்பிட்டு ஆந்திர முதல்வரின் மகனுக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்.
சா்வதேச யோகா தினம் இன்று(ஜூன் 21) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, ஆந்திர பிரதேசத்திலுள்ள் விசாகப்பட்டினத்தில் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் மிக பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
3 லட்சத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்ற இந்நிகழ்ச்சி, கின்னஸ் உள்பட பல்வேறு உலக சாதனைகளைப் படைக்கும் என்று மாநில முதல்வரும், பாஜகவின் கூட்டணிக் கட்சியான தெலுங்கு தேசம் தலைவருமான சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இந்த பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பிரதமர் மோடி ஆந்திர பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகனும் அம்மாநில அமைச்சருமான நாரா லோகேஷைப் புகழ்ந்து பேசினார்.
அவர் பேசியதாவது: “யோகா நாளை சமூகத் திருவிழாவாக மாற்றி நடத்தியதற்காக நாரா லோகேஷ், சுமார் ஒன்றரை மாதமாக கடுமையாக உழைத்தார். அவரது முயற்சியால் சமூகத்தின் அனைத்து பிரிவினரையும் ஒருங்கிணைத்து சமூகத் திருவிழாவாக யோகா நாள் கொண்டாடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்கான அவரது திட்டமிடலும் செயல்பாடும் ஒட்டுமொத்த தேசத்துக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. எந்தவொரு பொது நிகழ்ச்சிகளிலும் அனைவரும் பங்கேற்கும் வகையில் ஒருங்கிணைத்து நடத்திட நாடு முழுவதும் இதே பாணியில் செயல்படலாம்” என்று பேசினார்.