செய்திகள் :

ரகசியமாக இந்தியா வந்து சென்ற தலிபான் அமைச்சர்கள்?

post image

ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசின் மூத்த அமைச்சர்கள், ரகசியமாக இந்தியா வந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறின. இதையடுத்து, தலிபான்களின் தலைமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை தற்போது ஆட்சி செய்து வருகின்றது.

ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை தலிபான் அரசு கோரி வருகின்றது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மருத்துவம் மற்றும் உணவுத் துறை துணை அமைச்சர் ஹம்துல்லா ஸாஹித், கடந்த வாரம் தலிபான் அதிகாரிகள் குழுவுடன் தலைநகர் தில்லிக்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தில், இந்திய வர்த்தக சபை அதிகாரிகளுடனான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டதாகவும், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவர் தாயகம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.

இதேபோல், ஆப்கான் அரசின் பாதுகாப்பு மற்றும் செயல்திட்ட விவகாரங்களைக் கையாளும் அமைச்சர் ஒருவரும் தில்லி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அவர் யாரெனும் தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.

தலிபான் அரசை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், காபுலில் இந்தியத் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு நிவாணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பியதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

இத்துடன், மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இருந்த ஆப்கானிஸ்தான் தூதரகங்கள், தலிபான் அரசு நியமித்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

Reports have emerged that senior ministers of the Taliban government, which is ruling Afghanistan, have secretly visited India.

பிரதமர், ராணுவத் தளபதியைத் தொடர்ந்து.. சீனா சென்ற பாகிஸ்தான் அதிபர்!

பாகிஸ்தான் அதிபர் ஆசிஃப் அலி சர்தாரி, 10 நாள்கள் அரசு முறைப் பயணமாக சீனா நாட்டுக்குச் சென்றுள்ளார். பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷரீஃப் மற்றும் அந்நாட்டின் ராணுவத் தலைமைத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், சமீ... மேலும் பார்க்க

நேபாள இடைக்காலப் பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை பதவியேற்றார்.நேபாள நாட்டில், சமூக வலைதளங்கள் மீதான தடை மற்றும் அந்நாட்டு ஆட்சியாளர்களின் ஊழல் ஆகியவற்றுக்கு எதிராக ஜென்ஸி என்றழைக்கப்படும் இ... மேலும் பார்க்க

சார்லி கிர்க் கொலைக் குற்றவாளி கைது! 22 வயது இளைஞர் சிக்கிய பின்னணி என்ன?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளர் சார்லி கிர்க்கை கொன்றவரை எஃப்பிஐ கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலரும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆத... மேலும் பார்க்க

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி

காங்கோவில் படகு கவிழ்ந்ததில் மாணவர்கள் உள்பட 86 பலியாகினர். காங்கோவின் ஈக்வேடார் மாகாணத்தில் மோட்டார் படகு புதன்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. பசன்குஷு பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்ததாகவும், இதி... மேலும் பார்க்க

உயிரின் விலை ஒரு புல்லட்! சார்லி கிர்க்கும் சர்ச்சைப் பேச்சுகளும்!

“துப்பாக்கிகள் உயிரைக் காக்கின்றன”..!_ அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் தீவிர ஆதரவாளரும் அமெரிக்காவின் வலதுசாரி ஆர்வலருமான சார்லி கிர்க் கொல்லப்பட்ட நிலையில் அவரின் பழைய எக்ஸ் பதிவுகளும் அவரின் சர... மேலும் பார்க்க

முன்னாள் ஓபன்ஏஐ ஊழியர் சுச்சிர் பாலாஜி கொலை செய்யப்பட்டார்: எலான் மஸ்க் குற்றச்சாட்டு

ஓபன்ஏஐ நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் சுச்சிர் பாலாஜி மரணம் தற்கொலையல்ல, கொலை என்று தொழிலதிபரும், டெஸ்லா நிறுவனருமான எலான் மஸ்க் வெளிப்படையாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்.அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றுக்கு ... மேலும் பார்க்க