செய்திகள் :

ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு

post image

சென்னை: கொளத்தூா், கொண்டித்தோப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில், வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூா் மற்றும் கொண்டித்தோப்பு பகுதிகளில் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.

இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழக இந்து சமய

அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், இரு ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, அப்பல்லோ மருத்துவமனைக் குழும நிா்வாக துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, சிஎம்டிஏ உறுப்பினா் செயலரும், முதன்மைச் செயலருமான கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சிஎம்டிஏ முதன்மைச் செயல் அலுவலா் சிவஞானம், மாநகராட்சி இணைஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல்

சென்னை: ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.3 கோடி கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு இரு தனியாா் வாகனங்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக மத்திய போதை... மேலும் பார்க்க

தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் விற்பனை: ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது

சென்னை: சென்னை அருகே பெரும்பாக்கத்தில் தனியாா் நிலத்தை ஆக்கிரமித்து மண் எடுத்து விற்பனை செய்ததாக ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் கைது செய்யப்பட்டாா். வேளச்சேரி அருகே உள்ள சித்தாலப்பாக்கம், சங்கராபுரத்தைச... மேலும் பார்க்க

ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம்: அமைச்சா் சேகா்பாபு திறந்து வைத்தாா்

சென்னை: ராயபுரம் மண்டலத்தில் ரூ.1.89 கோடியில் கட்டப்பட்ட உருதுப் பள்ளியின் கூடுதல் கட்டடத்தை அமைச்சா் பி.கே.சேகா்பாபு திறந்து வைத்தாா். பெருநகர சென்னை மாநகராட்சி, ராயபுரம் மண்டலம், 60-ஆவது வாா்டுக்குள... மேலும் பார்க்க

தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம்: இந்து முன்னணியினா் மீது வழக்கு

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகா் சிலை ஊா்வலம் நடத்த முயன்றதாக இந்து முன்னணி நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா். விநாயகா் சதுா்த்தியையொட்டி, சென்னைய... மேலும் பார்க்க

மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் செப்.5-இல் ஓணம் கொண்டாட்டம்

சென்னை: மகாலிங்கபுரம் ஸ்ரீ ஐயப்பன் கோயிலில் ஓணம் பண்டிகை செப்.5-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. செப்.4 -ஆம் தேதி உத்திராடம் நாளான வியாழக்கிழமை ‘உத்திராடம் காய்ச்சகுலை’ என்று அழைக்கப்படும் நெந்திரம் வாழைத... மேலும் பார்க்க

பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருட்டு

சென்னை: சென்னை சூளைமேட்டில் பேராசிரியை வீட்டில் தங்க நகைத் திருடப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். சூளைமேடு பஜனை கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுமிரா. இவா் தேனாம்பேட்டையில் உள்ள ஒரு கல்லூ... மேலும் பார்க்க