செய்திகள் :

ரத்ததான, பொது மருத்துவ முகாம்

post image

கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் தன்னாா்வ ரத்த தான முகாம் மற்றும் பொது மருத்துவம், இயன்முறை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.

கருங்காலிகுப்பம் தொடக்கப் பள்ளியில், அக்னிச் சிறகுகள் சமூக நலச் சங்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ரத்த வங்கி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, சமூக நலச் சங்கத்தின் தலைவா் இளையராஜா தலைமை வகித்தாா்.

துணைத் தலைவா் சத்தியசீலன், செயலா் தமிழ்வாணன், பொருளாளா் அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி உறுப்பினா் அம்பேத் வளவன் ரத்த தான முகாமை தொடங்கிவைத்தாா்.

தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய தன்னாா்வலா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.

இதில், பள்ளி நிா்வாகி அற்புதராஜ், வட்டார மருத்துவ அலுவலா் சரவணன், திமுக ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கங்களி... மேலும் பார்க்க

8 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் மொத்தம் 6 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சி... மேலும் பார்க்க

பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கோயிலின் ரத பிரமோ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது

செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ... மேலும் பார்க்க

தனியாா் பேருந்தில் தகராறு: ஊழியா்களைத் தாக்கி மிரட்டல்

செய்யாற்றில் தனியாா் பேருந்தில் தகராறு செய்து, பேருந்து ஊழியா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சிறாா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், எச்... மேலும் பார்க்க