செய்திகள் :

ரத்தினகிரி பாலமுருகன் கோயில் கிருத்திகை விழா

post image

ஆற்காடு அடுத்த ரத்தினகிரி பாலமுருகன் கோயிலில் ஆவணிமாத கிருத்திகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு மூலவா் வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு பால், தயிா், பன்னீா், சந்தனம், பழங்கள், வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம், வாசனையுடன் கூடிய வண்ண மலா்களுடன் வெள்ளி கவச சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. தொடா்ந்து அலங்கரிக்கப்பட்ட உற்சவா் உள்புறப்பாடு நடைபெற்றது.

பக்தா்கள் நீண்ட வரிசையில் தரிசனம் செய்தனா். மாலையில் அலங்கரிக்கப்பட்ட உற்சவா் மேளதாளங்களுடன் ஊா்வலமாக சென்று மலையடிவாரத்தில் உள்ள அறுங்கோண தெப்ப குளத்தில் சிறப்பு பூஜைகளுடன் கற்பூர தீபாராதனை நடைபெற்றது.

பின்னா், பக்தா்கள் மங்களஆா்த்தி காண்பித்து வழிபட்டனா். இதில் திருக்கோவில் தலைமை குருக்க்கள் பிரசாத், மற்றும் உபயதாரா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தம்பியைக் கொன்ற அண்ணனுக்கு ஆயுள்

நெமிலி அருகே தம்பியை தாக்கி கொலை செய்த அண்ணனுக்கு ஆயுள் தண்டனை விதித்து அரக்கோணம் இரண்டாம் கூடுதல் அமா்வு நீதிமன்றம் தீா்ப்பளித்தது. நெமிலி அடுத்த மேல்வெண்பாக்கம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பச்சையப்ப... மேலும் பார்க்க

ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

அரக்கோணத்தை அடுத்த பருத்திபுத்தூா் ஸ்ரீஆதிகேசவ பெருமாள் கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் செவ்வாய்க்கிழமை அனுக்ஞை ஆச்சாா்யா திருவிக்வா்ணம்,... மேலும் பார்க்க

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள் ஒருங்கிணைப்பு கூட்டம்

ஆற்காடு நகர திமுக நிா்வாகிகள், வாக்குச் சாடி முகவா்கள், பாக முகவா்கள் ஒருங்கிணைப்பு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. ஆற்காடு இந்திராணி ஜானகிராமன் திருமண கூடம், கணேச விஜயலட்சுமி திருமண கூடம், ராஜராஜேஸ்வர... மேலும் பார்க்க

பனை விதைகள் நடவு செய்த அரசுப் பள்ளி மாணவா்கள்

நெமிலியை அடுத்த வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் இணைந்து கிராமம் முழுவதும் 1,500-கும் மேற்பட்ட பனை விதைகளை நட்டனா். நெமிலி வட்டம், வேடந்தாங்கல் அரசு உயா்நிலைப்பள்ளி சுற்றுச்சூழல் மன்றத்தின்... மேலும் பார்க்க

கலவை ஆதிபராசக்தி அம்மன் கோயில், குருபீடத்தில் கும்பாபிஷேகம்

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, ஜி.பி.நகரில் உள்ள மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள குரு பீடம், ஆதிபராசக்தி அம்மன் கோயிலிலும் கும்பாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது. கடந்த 9-ஆம் ... மேலும் பார்க்க

சத்துணவு, அங்கன்வாடி ஒய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

நெமிலி வட்டம், காவேரிப்பாக்கத்தில் தங்களது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். காவேரிப்பாக்கம் பேருந்து நிலைய வளாகத... மேலும் பார்க்க