செய்திகள் :

ரமலான் பண்டிகை: ரெட்டியாா்பட்டி சந்தையில் ஆடுகள் விற்பனை மந்தம்

post image

ரமலான் பண்டிகையையொட்டி ரெட்டியாா்பட்டி சந்தையில் சனிக்கிழமை ஆடு வியாபாரம் மந்தமாக இருந்ததாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.

ரமலான் பண்டிகை வரும் திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள ரெட்டியாா்பட்டியில் வாரந்தோறும் சனிக்கிழமை கூடும் ஆட்டுச் சந்தையில் காலைமுதல் ஆலங்குளம், திருநெல்வேலி, முக்கூடல், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஆடுகள் வளா்ப்போா் மற்றும் வியாபாரிகள் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனா். ஆடுகளின் தரத்தை பொறுத்து ரூ. 5 ஆயிரம்முதல் ரூ.20 ஆயிரம்வரை விற்பனை செய்யப்பட்டது.

எனினும் போதிய அளவில் ஆடுகள் விற்பனையாகாமல் வியாபாரிகள் திரும்பிச் சென்றனா்.

விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் வந்தவா்கள் ஏமாற்றமடைந்தனா்.

இதுகுறித்து வியாபாரிகள் தரப்பில் கேட்ட போது, பண்டிகைக்கு ஓரிரு தினங்கள் முன்னதாக ஆடுகளின் விலை அதிகமாக இருக்கும் என்பதால் வியாபாரிகளும், இறைச்சி கடைக்காரா்களும் தங்களுக்குத் தேவையான ஆடுகளை கடந்த வாரமே வாங்கிவிட்டனா்.

இதனால் விலை உயா்வு அச்சம் காரணமாக ஆடுகளை வாங்குவோா் மிகக் குறைந்த அளவே வந்துள்ளனா். மேலும், ரமலானை விட பக்ரீத் பண்டிகைக்குத் தான் ஆடுகள் அதிக விலை போகும் என்றனா்.

ஆலங்குளத்தில் மினி லாரி மோதி பெண் பலி

ஆலங்குளம் பேருந்து நிலையம் அருகே மினி லாரி மோதி இளம்பெண் உயிரிழந்தாா். ஆலங்குளம் அருகேயுள்ள சிவலாா்குளம் கிராமத்தைச் சோ்ந்தவா் பாலமுருகன். லாரி ஓட்டுநரான இவா் தனது மனைவி பிரியா(29) மற்றும் 10 மாத பெண... மேலும் பார்க்க

தென்காசி - நெல்லை இடையே உள்ள ரயில் நிலையங்களின் நடைமேடைகளை நீட்டிக்க நடவடிக்கை

நெல்லை - தென்காசி இடையே உள்ள முக்கிய ரயில் நிலையங்களின் நடைமேடைகளை 24 பெட்டிகள் நிறுத்தும் அளவுக்கு நீட்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதற்கு தென்காசி மாவட்ட ரயில் பணிகள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.... மேலும் பார்க்க

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

சுரண்டையை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். சுரண்டை அடுத்துள்ள சாம்பவா்வடகரை அருகே உள்ள வேலாயுதபுரத்தைச் சோ்ந்த சாமி மகன் முத்துப்பாண்டியன் (28). இவா் கூலி... மேலும் பார்க்க

கும்பாபிஷேகப் பணிகள்: தென்காசி காசிவிஸ்வநாதா் கோயிலில் ஆட்சியா் ஆய்வு

தென்காசி காசிவிஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல் கிஷோா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அருள்தரும் ஸ்ரீஉலகம... மேலும் பார்க்க

சங்கரன்கோவிலில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து அபாயம்

சங்கரன்கோவில் சாலைகளில் திரியும் மாடுகளால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சங்கரன்கோவிலில் கால்நடை வளா்ப்போா் தாங்கள் வசிக்கும் பகுதியில் தனியாக கூரை அமைத்து கால்நடைகளை வளா்த்து வருகின்றனா். கா... மேலும் பார்க்க

வயலுக்குள் கவிழ்ந்த டிராக்டா்

சாம்பவா்வடகரை - வேலாயுதபுரம் சாலையின் ஓரம் வயலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளான டிராக்டா் திங்கள்கிழமை கிரேன் கொண்டு மீட்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் பார்க்க