செய்திகள் :

ரயிலை போல இடஒதுக்கீடு மாறியுள்ளது: உச்சநீதிமன்றம் விமா்சனம்

post image

ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்பாதது போல, நாட்டில் இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது என்று உச்சநீதிமன்றம் விமா்சித்துள்ளது. இதன்மூலம், இடஒதுக்கீட்டால் பயனடைந்தவா்கள், அந்த ஒதுக்கீட்டால் மற்றவா்கள் பயனடைவதை விரும்புவதில்லை என்று மறைமுகமாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர உள்ளாட்சித் தோ்தலில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) இடஒதுக்கீடு அளிப்பதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, உச்சநீதிமன்றத்தில் மங்கேஷ் சங்கா் சாசனே என்பவா் மனு தாக்கல் செய்தாா்.

இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூா்ய காந்த், என்.கோட்டீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரா் தரப்பில் மூத்த வழக்குரைஞா் கோபால் சங்கரநாராயணன் ஆஜராகி, ‘மகாராஷ்டிரத்தில் உள்ள ஓபிசிக்களுக்கு உள்ளாட்சித் தோ்தலில் 27 சதவீத இடஒதுக்கீடு அளிக்க மகாராஷ்டிர அரசின் ஜெயந்த்குமாா் பாந்தியா தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தது. அந்த வகுப்பினா் அரசியல் ரீதியாக பின்தங்கியுள்ளாா்களா என்பதை கண்டறியாமல் இந்தப் பரிந்துரை வழங்கப்பட்டது’ என்றாா்.

இதை கேட்ட நீதிபதி சூா்ய காந்த், ‘இந்தியாவில் இடஒதுக்கீடு என்பது ரயிலை போல உள்ளது. ரயில் பெட்டியில் ஏறியவா்கள், அந்தப் பெட்டியில் மற்றவா்கள் ஏறுவதை விரும்புவதில்லை. அதுபோலத்தான் தற்போது இடஒதுக்கீடு முறை மாறியுள்ளது. இதுவே மனுதாரரின் நிலைப்பாடாகவும் உள்ளது என்பது தெளிவாக தெரிகிறது’ என்றாா்.

இதையடுத்து வாதிட்ட கோபால் சங்கரநாராயணன், ‘அரசியல் ரீதியாக பின்தங்கிய நிலை என்பது சமூக மற்றும் கல்வி ரீதியாக பின்தங்கிய நிலையுடன் ஒப்பிடுகையில் வேறானது. அரசியல் ரீதியாக ஓபிசிக்கள் பின்தங்கியுள்ளனா் என்று ஊகித்துக் கொள்ள முடியாது. இடஒதுக்கீடு அளிப்பதற்காக ஓபிசி வகுப்பினரில் அரசியல் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கியவா்கள் கண்டறியப்பட வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து நீதிபதி சூா்ய காந்த் கூறுகையில், ‘அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கும் கொள்கையைப் பின்பற்றும்போது கூடுதல் வகுப்பினரை கண்டறிய வேண்டியது மாநிலங்களின் கடமை. நாட்டில் சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கியவா்கள் இருப்பாா்கள். அவா்களுக்கு ஏன் இடஒதுக்கீட்டு கொள்கை மறுக்கப்பட வேண்டும்? அது ஏன் குறிப்பிட்ட ஒரு குடும்பம் அல்லது குழுவுக்கானதாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்?’ என்று கேள்வி எழுப்பினாா்.

இதையடுத்து மனு தொடா்பாக பதிலளிக்குமாறு மகாராஷ்டிர அரசுக்கு நீதிபதிகள் அமா்வு நோட்டீஸ் பிறப்பித்தது.

ஆபரேஷன் சிந்தூர்: தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்கள் ரத்து!

பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதல்களினால் தில்லி விமான நிலையத்தில் 140 விமானங்களின் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.தில்லி விமான நிலையத்துக்கு, சர்வதேச நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு விமானப் போ... மேலும் பார்க்க

போர் பாதுகாப்பு ஒத்திகை: தில்லியில் இன்று மின்சாரம் துண்டிப்பு!

போர் பாதுகாப்பு ஒத்திகையின் ஒரு பகுதியாக தில்லியில் இன்று (மே 7) இரவு மின்சாரம் துண்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் தில்லியில் இன்று இரவு 8 மணி முதல் 8.15 மணி வரை 15 நிமிடங்களுக்கு மின்ச... மேலும் பார்க்க

இந்தியாவில் மோசடியில் ஈடுபட்ட 23,000 முகநூல் பக்கங்கள் முடக்கம்!

இந்தியா மற்றும் பிரேஸிலில் முதலீடு மோசடி தொடர்பான முகநூல் கணக்குகளை மெட்டா நிறுவனம் நீக்கியது.இந்தியா மற்றும் பிரேஸில் நாடுகளில், மார்ச் மாதத்தில் மட்டும் முதலீடு மோசடி தொடர்பான முகநூலின் 23,000-க்கும... மேலும் பார்க்க

ஆபரேஷன் சிந்தூர்: பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரியின் மனைவி கருத்து!

ஆபரேஷன் சிந்தூர் குறித்து பஹல்காம் தாக்குதலில் பலியான கடற்படை அதிகாரி வினய் நர்வாலின் மனைவி ஹிமான்ஷி நர்வால் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் பார்க்க

கேரளத்தின் 14 மாவட்டங்களிலும் போர்கால பாதுகாப்பு ஒத்திகை!

மத்திய உள் துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி கேரள மாநிலத்தின் 14 மாவட்டங்களிலும் பாதுகாப்பு ஒத்திகைகள் நடத்தப்பட்டுள்ளது. பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆக... மேலும் பார்க்க

பஹல்காம் தாக்குதல்: சுற்றுலாப் பயணிகள், மக்கள் ஆதாரங்களை வழங்கலாம்!

பஹல்காம் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், விடியோக்கள் இருந்தால் சுற்றுலாப் பயணிகள், மக்கள் வழங்கலாம் என தேசிய புலானய்வு முகமை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேசிய புலனாய்வு முகமை வெளியிட்டுள்ள தகவலில்,... மேலும் பார்க்க