செய்திகள் :

ரயில்வேயிடமிருந்து ரூ.140 கோடி ஆர்டரை வென்ற டெக்ஸ்மாக்கோ!

post image

கொல்கத்தா: டெக்ஸ்மாக்கோ ரயில் அண்டு பொறியியல் லிமிடெட், பல்நோக்கு வேகன்களை வழங்குவதற்காக ரயில்வேயிடமிருந்து ரூ.140.55 கோடி மதிப்புள்ள ஆர்டரை பெற்றுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த வேகன்கள் எஃகு சுருள்கள், கொள்கலன்கள், ராணுவ வாகனங்கள் ஆகியவற்றை எடுத்துச் செல்லவும், ரோல்-ஆன் அல்லது ரோல்-ஆஃப் செயல்பாடுகளை ஆதரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

இந்த உத்தரவால் அமைச்சகம் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது. அதே வேளையில் சரக்கு நடவடிக்கைகளை நவீனமயமாக்குவதில் அரசு கவனம் செலுத்துவதை எடுத்துக்காட்டுகிறது என்றார் டெக்ஸ்மாக்கோ ரயில் நிறுவனத்தின் துணைத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான இந்திரஜித் முகர்ஜி.

மொத்த ஆர்டர் தற்போது ரூ.7,115 கோடியை எட்டியுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதையும் படிக்க: மார்ச் காலாண்டில் சோபா லிமிடெட் லாபம் 6 மடங்கு அதிகரிப்பு!

டிஷ் டிவியின் 4-வது காலாண்டு இழப்பு ரூ.402.19 கோடி!

புதுதில்லி: டைரக்ட்-டு-ஹோம் நிறுவனமான டிஷ் டிவி இந்தியா லிமிடெட் மார்ச் முடிய உள்ள காலாண்டில் ரூ.402.19 கோடி ஒருங்கிணைந்த நிகர இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்ததுள்ளது.கடந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் வர... மேலும் பார்க்க

ஹோண்டா கோல்டு விங் டூரின் 50-வது ஆண்டு விழாவுக்கான பைக் அறிமுகம்!

ஹோண்டாவின் கோல்டு விங் டூர் 50-வது ஆண்டுக்கான பதிப்பு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கலாம்.50 ஆண்டுகளாக சொகுசு பயணங்களுக்கான அதிநவீன வ... மேலும் பார்க்க

டாடாவின் பட்ஜெட்-ஃப்ரீ கார்! புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்!

டாடா நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. பம்பர், கதவின் கைப்பிடிகளிலும் புதிய மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. டாடாவின் பிரீமியம் தரத்திலான ஹேட்ச்பேக... மேலும் பார்க்க

வார இறுதியில் தங்கம் வாங்கலாமா? இதோ தங்கம் விலை நிலவரம்!

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் மாற்றமின்றி, ஒரு சவரன் தங்கம் ரூ.71,360க்கு விற்பனை செய்யப்படுகிறது.மே 26ஆம் தேதி இந்த வாரம் தொடங்கிய போது, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் விலை ரூ.71,600க்கு வ... மேலும் பார்க்க

வங்கி மோசடி வழக்குகள் குறைந்தன! ஆனால் சந்தோஷப்பட ஒன்றுமில்லை!! ஏன்?

கடந்த 2023-24ஆம் நிதியாண்டைக் காட்டிலும் நடப்பு நிதியாண்டில் வங்கி மோசடி வழக்குகள் குறைந்துள்ளன என்று ஆர்பிஐ ஆண்டறிக்கை தெரிவிக்கிறது.ஆனால், வங்கி மோசடி வழக்குகள்தான் குறைந்திருக்கிறதே தவிர, கடந்த நித... மேலும் பார்க்க

சரிவில் பங்குச் சந்தை! இன்றைய நிலவரம் என்ன?

பங்குச்சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் முடிவடைந்த நிலையில் இன்று(வெள்ளிக்கிழமை) சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகின்றன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் இன்று காலை 81,465.69 என்ற புள்ளிகளில் த... மேலும் பார்க்க