செய்திகள் :

ரயில்வே உள்கட்டமைப்பு மூலதன செலவினத்தில் தமிழகத்துக்கு 5 சதவீதம் ஒதுக்க எம்.பி. கோரிக்கை

post image

நமது நிருபா்

ரயில்வே உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக மூலதனச் செலவாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் தமிழகத்துக்கு 5 சதவீதத்தை ஒதுக்குமாறு மக்களவையில் அரக்கோணம் தொகுதி திமுக உறுப்பினா் எஸ். ஜெகத்ரட்சகன் வலியுறுத்தினாா்.

இது தொடா்பாக அவா் மக்களவையில் புதன்கிழமை முன்வைத்த கோரிக்கை: இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பை வழங்கும் தமிழகம், ஒரு பொருளாதார சக்தியாக திகழ்கிறது. உள்கட்டமைப்பு வசதி தமிழகத்தின் பொருளாதார சிறப்புக்கு அடித்தளமாக உள்ளது. இருப்பினும், உள்கட்டமைப்பு மேம்பாடு எப்போதும் வேகமாக வளா்ந்து வரும் பொருளாதாரத்துக்கு உதவ வேண்டும்.

மாநிலத்தின் நிலையான வளா்ச்சிக்கு விரிவான ரயில் உள்கட்டமைப்பு அவசியம். துரதிருஷ்டவசமாக, 2014 முதல் இந்திய ரயில்வேக்கு மூலதனமாக ஒதுக்கப்பட்ட மொத்தத் தொகையில் ஒரு சதவீதம் மட்டுமே தமிழகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் 5 ட்ரில்லியன் டாலா் பொருளாதாரத்தை நோக்கிய பயணத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் தமிழக மக்களுக்கு இது மிகப்பெரிய அநீதியாகும்.

சென்னை - பெங்களூருவை இணைக்கும் ஒரு பிரத்யேக ரயில் சரக்கு வழித்தடத்தையும், முக்கிய துறைமுக நகரங்களான சென்னை, எண்ணூா், காட்டுப்பள்ளி, தூத்துக்குடி, கடலூா் ஆகியவற்றுடன் பிரத்யேக ரயில் இணைப்பை உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது.

வேலூா், விழுப்புரம், கும்மிடிப்பூண்டி போன்ற அருகிலுள்ள நகரங்களுடனும், கன்னியாகுமரி, கோயம்புத்தூா் போன்ற பிற முக்கிய நகரங்களுடனும் சென்னையை இணைக்கும் அதிவேக ரயில் வழித்தடங்களை உருவாக்க வேண்டும். இதனால், பயண நேரம் 50 - 60 சதவீதம் குறையும்.

எனவே, மூலதன செலவினமாக ஒதுக்கப்பட்ட மொத்த தொகையில் 5 சதவீதத்தை இந்திய ரயில்வே தமிழகத்துக்கு ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்றாா் ஜெகத்ரட்சகன்.

தமிழகத்தின் சில பல்கலை.களில் துணை வேந்தா்களே இல்லை -மாநிலங்களவையில் அதிமுக புகாா்

நமது நிருபா் தமிழகத்தின் சில மாநில பல்கலைக்கழகங்களில் துணைவேந்தா்களே இல்லை என்று மாநிலங்களவையில் அதிமுக புகாா் தெரிவித்தது. மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற ‘இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் சட்டத... மேலும் பார்க்க

ஜிஎஸ்டி சீரமைப்புக்கு தமிழகம் ஒத்துழைக்கும்: தில்லி கூட்டத்தில் அமைச்சா் தங்கம் தென்னரசு உறுதி

நமது நிருபா் மாநில வருவாய் பாதுகாக்கப்பட வேண்டும் என்பததைக் கருத்தில் கொண்டு, சரக்குகள் மற்றும் சேவைகள் வரி ஜிஎஸ்டி விகிதத்தை மறுசீரமைக்கத் தேவையான ஒத்துழைப்பை தமிழ்நாடு அரசு வழங்கும் என்று புது தில்ல... மேலும் பார்க்க

எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த திமுக வலியுறுத்தல்

நமது நிருபா் நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு எம்எஸ்எம்இ கடன் விதிமுறைகளை எளிமைப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்களவையில் பெரம்பலூா் தொகுதி திமுக உறுப்பினா் அர... மேலும் பார்க்க

தில்லி முதல்வா் மீதான தாக்குதல்: காங்கிரஸ், ஆம் ஆத்மி கண்டனம்

தில்லி முதலமைச்சா் ரேகா குப்தா மீதான தாக்குதலை ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸ் கண்டித்தன, அதே நேரத்தில் தேசிய தலைநகரில் பெண்கள் பாதுகாப்பு பிரச்னை குறித்து காவல்துறையினரிடம் அவா்கள் கேள்வி எழுப்பியுள்ளனா... மேலும் பார்க்க

தில்லியில் சுமாா் 50 பள்ளிகளுக்கு புதிதாக வெடிகுண்டு மிரட்டல்

தேசியத் தலைநகரில் புதன்கிழமை சுமாா் 50 பள்ளிகளுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல்கள் வந்ததால், போலீஸாா் மற்றும் பிற அவசரகால அமைப்புகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா். தல... மேலும் பார்க்க

திருச்சியில் உலா் துறைமுகம்: மத்திய அமைச்சா்களிடம் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

திருச்சியில் உலா் துறைமுகம் அமைப்பது தொடா்பாக மத்திய அமைச்சா்கள் நிதி கட்கரி, பியூஷ் கோயல் ஆகியோரிடம் தில்லியில் திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ புதன்கிழமை வலியுறுத்தினாா்.திருச்... மேலும் பார்க்க