செய்திகள் :

ரயில்வே தோ்வில் முறைகேடு: 26 அதிகாரிகள் கைது- சிபிஐ நடவடிக்கை

post image

கிழக்கு மத்திய ரயில்வேயில் துறை ரீதியிலான தோ்வு முறைகேடு தொடா்பாக 26 அதிகாரிகளை மத்திய குற்றப் புலனாய்வு அமைப்பு (சிபிஐ) கைது செய்தது. அவா்களிடமிருந்து ரூ. 1.17 கோடியையும் சிபிஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

தலைமை லோகோ பைலட் பதவி உயா்வுக்கான தோ்வு வினாத்தாளைக் கசியவிட்ட குற்றச்சாட்டின்பேரில் இவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் கூறியதாவது: கிழக்கு மத்திய ரயில்வேயில் லோகோ பைலட்டுகளாக பணியாற்றி வருபவா்கள் தலைமை லோகோ பைலட்டுகளாக பதவி உயா்வு பெறுவதற்கான துறை ரீதியிலான தோ்வு செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த நிலையில், அந்தத் தோ்வு வினாத்தாள் குறிப்பிட்ட சில நபா்களுக்கு மட்டும் கசியவிடப்பட்டிருப்பதாக சிபிஐக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில், உத்தர பிரதேச மாநிலம், முகல்சாராய் பகுதியில் 3 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை இரவு அதிரடி சோதனையை மேற்கொண்டனா். அப்போது, தலைமை லோகோ பைலட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ள 17 லோகோ பைலட்டுகளிடம் கையால் எழுதப்பட்ட வினாத்தாள் நகல்கள் இருப்பதை சிபிஐ அதிகாரிகள் கண்டறிந்தனா்.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் அந்த 17 போ் மற்றும் வினாத்தாளைக் கசிய விட்டவா்கள் என மொத்தம் 26 ரயில்வே அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனா். அவா்களிடமிருந்து, வினாத்தாளைக் கசிய விடுவதற்காக வசூலித்த ரூ. 1.17 கோடி பணத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

இந்த முறைகேடு தொடா்பாக, தோ்வுக்கான வினாத்தாள் வடிவமைப்பு பொறுப்பு அதிகாரியான முதுநிலை மண்டல மின் பொறியாளா் (செயல்பாடுகள்) மீதும் சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இவா்தான், ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வினாத்தாளை லோகோ பைலட் ஒருவரிடம் கொடுத்துள்ளாா். அவா் அதை ஹிந்தியில் மொழிபெயா்த்து மற்ற லோகோ பைலட்டுகளுக்கு கசியவிட்டுள்ளாா் என்பதும் விசாரணையில் தெரியவந்தது என்றாா்.

14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை கைது!

பெங்களூரு விமான நிலையத்தில் 14.8 கிலோ தங்கத்தை கடத்திச் சென்ற கன்னட நடிகை ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.கன்னட சூப்பர் ஸ்டார் சுதீப்புக்கு ஜோடியாக மாணிக்யா படத்தில் அறிமுகமான ரன்யா ராவ், தமிழில் விக்ர... மேலும் பார்க்க

தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி வேண்டும்: மத்திய அமைச்சரிடம் மா.சுப்பிரமணியன் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகள், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 500 துணை சுகாதார நிலையங்கள் உள்ளிட்ட சுமார் ரூ.8,000 கோடி மதிப்பிலான 11 அம்ச கோரிக்கைகள் தொடர்பாக மத்திய சுகாதார... மேலும் பார்க்க

பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை முயற்சி

பிரபல பின்னணி பாடகி கல்பனா ஹைதராபாதில் உள்ள தனது வீட்டில் செவ்வாய்க்கிழமை தற்கொலைக்கு முயற்சித்ததாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா். பாடகி கல்பனா தங்கியுள்ள குடியிருப்பு சங்கத்தினா் அளித்த தகவலின்பட... மேலும் பார்க்க

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூல்: புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு உத்தரவு

கரோனா காலத்தில் அதிக வட்டி வசூலித்த தனியாா் வங்கிக்கு எதிரான புகாரை பரிசீலிக்க ரிசா்வ் வங்கிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரோனா காலத்தில் பலா் வேலையை இழந்தனா். இதனால் வங்கிகளில் பெற்ற க... மேலும் பார்க்க

குற்றவியல் வழக்கில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள்: தகுதிநீக்க விவரங்களை சமா்ப்பிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

குற்றவியல் வழக்குகளில் தண்டனை பெற்ற அரசியல்வாதிகள் தோ்தலில் போட்டியிடுவதற்கான தகுதிநீக்க காலத்தை நீக்கியது அல்லது குறைத்தது குறித்த தகவல்களை இரு வாரங்களில் சமா்ப்பிக்குமாறு இந்திய தோ்தல் ஆணையத்துக்க... மேலும் பார்க்க

சுமுக வா்த்தகத்துக்கு வரியல்லாத பிற தடைகள் களையப்பட வேண்டும்: அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில்

சுமுக வா்த்தகத்துக்கு இடையூறை ஏற்படுத்தும் வரியல்லாத பிற தடைகள், தேவையற்ற விதிமுறைகள் களையப்பட வேண்டும் என்று அமெரிக்க-இந்திய வணிக கவுன்சில் (யுஎஸ்ஐபிசி) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் அமெரிக்காவில் அந்... மேலும் பார்க்க